17 நவம்பர் 2012

சில புத்தகங்கள் - எச்சரிக்கைகள் 2

கல்கி அலைஓசை முன்னுரையில் ஒரு சம்வத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஒரு முறை ரயிலில் பிராயணம் செய்ய நேரிட்ட போது எனக்கும் அத்தகைய அவசியம் ஏற்பட்டது. "தூக்கம்தான் வருவதில்லை! ஏதேனும் ஒரு புத்தகமாவது படித்து வைக்கலாம்!" என்று எண்ணி, திருச்சி ரயில் சந்திப்பில் உள்ள புத்தகக் கடையில் ஒரு புத்தகம் வாங்க சென்றேன். .....
 
புத்தகத்தை பிரித்து படிக்கலானேன். படிக்க ஆரம்பித்ததுமே ஓர் ஐயம் தோன்றியது, ஒரு பாரா படித்ததும் சந்தேகம் அதிகமாயிற்று. ஒரு பக்கத்தை தொடங்கியதும் சந்தேகம் ஊர்ஜிதமாகியது. "அட சட்! இந்த புத்தகத்தை முன்னொருதடவை படித்து தொலைத்திருக்கிறோமே? இதையா மறுபடியும் விலை கொடுத்துவாங்கினோம்? ஐந்தேமுக்கால் ரூபாய் தண்டம்

 அது போன்ற ஒரு அனுபவம் எனக்கும் கிடைத்தது. என்ன அவருக்கு ஐந்தே முக்கால் ரூபாய் எனக்கு எழுபத்தைந்து ரூபாய்.

அசோகமித்திரனின் புத்தகங்களை கிழக்கில் ஆர்டர் செய்தேன். அதில் ஒரு புத்தகம் "இன்று". வந்தவுடன் ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தேன், முதலில் ஒரு சந்தேகம் வந்தது எங்கோ படித்த மாதிரி உள்ளதே என்று. முதல் பக்கம் தாண்டியவுடன் முழுவதும் தெரிந்து விட்டது அது ஏற்கனவே வேறு ஒரு குறுநாவல் தொகுப்பில் உள்ள கதை என்று. தலைப்பை மாற்றி உள்ளனர். "விழா மாலைப் போதில்" என்னும் குறுநாவல் தொகுப்பில் அதன் பெயர் "என்றும் இன்று". நொந்து கொண்டு அலமாரியில் பத்திரமாக வைத்தேன்.

இதை விட எரிச்சல் இரண்டும் கிழக்கு பதிப்பகம். "இன்று" 75, அதோடு சேர்த்த 4 நாவல்களின் தொகுப்பு 150. பதிப்பு வருடம் வேறு, "இன்று" 2006, தொகுப்பு 2009. நாவலின் பெயரை மாற்றாமலிருந்திருந்தால் தெரிந்திருக்கும்.

இப்பொது அனைத்து புத்தகங்களும் முழுத் தொகுப்பாக வருகின்றன. எனவே புத்தகம் வாங்கும் முன் தெளிவாக பார்த்து விட்டு வாங்கவும். ஆன்லைனில் புரட்டி பார்த்து வாங்கும் வசதி இல்லை, அவர்கள் சேர்க்கும் ஒன்றிரண்டு வரிகளை படித்து எந்த முடிவிற்கும் வர முடிவதில்லை.

பதிப்பகத்தாரும் என்ன செய்வார்கள் அனைத்து விவரங்களையும் ஆன்லைனில் அப்டேட் செய்ய முடியாது, அட்லீஸ்ட் அவர்கள் சொந்த பதிப்பகத்தில் வரும் புத்தகங்களை பார்த்து அப்டேட் செய்தால் புண்ணியம் கட்டிக் கொள்வார்கள். இது போன்ற நாவல் தொகுப்புகளில் பெயரை மாற்றாமலும், அது தனியாக வந்துள்தா என்று ஒரு சிறிய குறிப்பும் இருந்தால் என்னைப் போன்ற ஆன்லைன் சோம்பேறிகளுக்கு பேருதவியாக இருக்கும்.

முடிந்தவரை நன்றாக தெரிந்த புத்தகத்தை மட்டும் ஆன்லைனில் வாங்கவும். இல்லையென்றால் என் போல் "ஙே" என்று முழிக்க வேண்டியதுதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக