12 பிப்ரவரி 2013

நான்காவது கொலை - ஜெயமோகன்

சனி, ஞாயிறு வேலை வெட்டி ஏதுமில்லை. டீவியும் டமார். இன்டர்நெட்டே கதி. வகை தொகையில்லாமல் கண்டதையும் படித்து களைத்து, மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் என்று ஜெயமோகன் அவர்களின் தளத்தில் இருந்த நகைச்சுவை வகை கட்டுரைகளை படிக்க ஆரம்பித்தேன். 

பெரும்பலானவை சிரிக்க வைத்தது. சில புன்னகைக்கவும், சில அழவும் வைத்தது.அய்யோ பாவம், இலக்கியம் எழுதி எழுதி நகைச்சுவை கட்டுரைகளில் கூட பெரிய பெரிய வரிகளாகவும், கடின வார்த்தைகளை போட்டும் எழுதுகின்றாரே என்று நினைத்துக் கொண்டேன். அப்போதுதான் இக்கதை நினைவில் வந்தது. திண்ணையில் எப்போதோ படித்தது. திண்ணை புது திண்ணையாகி பழைய திண்ணையில் தூங்கியவர்களை எங்கோ விரட்டி விட்டுவிட்டார்கள். இக்கதை பத்திரமாக சொந்தக்காரர் திண்ணையில் இருந்தது.

ஆரம்பித்ததில் இருந்து சிரித்துக் கொண்டே இருந்தேன். கிண்டல் கிண்டல் கதை முழுவதும் கிண்டல். திகம்பர சாமியாரில் ஆரம்பித்து, பரத் சுசீலா வரை. சூப்பர் மேனிலிருந்து ஜேம்ஸ்பாண்ட் வரை அனைவரையும் கிண்டலடித்துள்ளார். 

அனைத்து எழுத்தாளர்களின் நடையையும், கதாபாத்திரங்களையும் அவர் இஷ்டத்திற்கு உலாவ விட்டுள்ளார்.  கணேஷ் வசந்த், சங்கர் லால், ஆழ்வார்க்கடியான், இன்ஸ்பெக்டர் கோபாலன், துப்பறியும் சாம்பு, ஷெர்லக் ஹோம்ஸ் வாட்சன், சூப்பர் மேன், பேட் மேன், ஸ்பைடர் மேன், இரும்புக்கை மாயாவி, திகம்பர சாமியார் பெயரில்லா பாலகுமாரன் கதாபாத்திரம். அனைத்து எழுத்தாளர்களின் நடையும் இவருக்கு சரளமாக வருகின்றது. சுஜாதாவின் நடை அச்சு அசலாக பொருந்தி போகின்றது. இவர் அதே நடையில் ஒரு கதை எழுதி சுஜாதா எழுதினார் என்றால் கண்டிப்பாக நம்பிவிடுவார்கள். விஷ்ணுபுரமும், உபபாண்டவ புரமும் துணைக்கு வருகின்றது.

பகுதி 1, 234, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 1314 

மனசு ரிலாக்ஸாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக