01 மார்ச் 2016

வெண்முகில் நகரம் - ஜெயமோகன்

வெண்முகில் நகரம் - வெண்முரசு வரிசையின் ஆறாவது நாவல். அதற்கடுத்து இரண்டு புத்தகங்கள் வந்துவிட்டன. புத்தகம் வந்த கையோடு எனது மடிக்கணிணி வேலை செய்ய மறுத்து விட்டது. ஒரு சில ’கீ’க்கள் மட்டும் வைகுண்டம் போய் விட்டது. ஒரு வழியாக சரியாகி வந்த பின் வேறு புத்தகங்கள் வந்துவிட்டது. 

ஜெயமோகன் நாவல் எழுதும் வேகத்தில் நாவலைப் பற்றிய நம் கருத்தையும் எழுதுவது என்றால் எங்கே போவது. நானெல்லாம் நல்ல நாளிலேயே சோம்பேறி, சுய புராணம் முடிந்தது இனி நாவல் பற்றி.

நாவல் வந்து பல நாள் ஆகிவிட்டது. அனைவரும் படித்திருப்பார்கள். இருந்தும் எழுதுவதன் காரணம் என்ன. ஒரு விஷயத்தை எழுதும் போது, நமக்கே தெரியாத, தோன்றாத பல புதிய விஷயங்கள் தோன்றும். சில குழப்பங்கள் தெளிந்து ஒரு கோர்வையாக ஒரு பார்வை கிடைக்கும். பிரயாகையை பற்றி எழுத ஆரம்பித்த பின்னரே அதில் வரும் வித விதமான தந்தைகளை பற்றிய பார்வை கிடைத்தது.