மரப்பசு. தலைப்பை பார்த்தவுடன் என்ன மாதிரியான கதை என்று யூகிக்க முடியாமல் தி. ஜானகிராமன் என்ற பெயரை பார்த்து வாங்கியது. மோகமுள்ளை பற்றி கேள்விபட்டு அதை தேடி அது இல்லாததால் இதை வாங்க நேர்ந்தது. அதோடு சற்று விலை குறைவாகவும் இருந்தது. இது நான் படித்த தி.ஜாவின் முதல் புத்தகம். வழக்கமான தி. ஜாவின் தஞ்சாவூர் பிண்ணணியில் ஆரம்பிக்கும் கதை எங்கெங்கோ போகின்றது.
அம்மிணி - கோபாலி. அம்மிணி ஒரு கல்லூரியில் படிக்கும் பெண், கோபாலி ஒரு பெரிய பாடகர். கோபாலியிடம் ஒரு தேங்காய் மூடி கச்சேரிக்காக வரும் அம்மிணியை கோபாலி மடக்கி போடுகின்றார். இது வரை ஏதோ ஒரு வகையில் கோப்பாக சென்ற கதை பின் தறிகெட்டு பாய்கின்றது. பார்ப்பவர்களை எல்லாம் தொட்டு பேச விரும்பும் அம்மிணி, அவளின் வெளிநாட்டு பயணம், அங்கு விளையாடும் விபச்சார விளையாட்டு, சந்திக்கும் ஒரு போர்வீரன், கோபாலியின் உறவினன், வேலைக்காரி. என்ன சொல்ல விரும்புகின்றார் என்பதே குழப்பம்தான். கடைசியில் தலை வெள்ளையாய் போய் அமர்கின்றாள்.

நான் எழுத நினைப்பதை ஏற்கனவே ஆர்.வி எழுதிவைத்துவிட்டார் இங்கு.
மோகமுள், அம்மா வந்தாள், செம்பருத்தி தவிர தி.ஜாவின் பிற நாவல்கள் பொருட்படுத்தத் தக்கது அல்ல.
பதிலளிநீக்குசெம்பருத்து கூட ஒரு மாற்று கம்மிதான். எப்படி முடிப்பது என்ற குழப்பத்தில் சிக்கியது போல தோன்றுகின்றது. அவரது மற்ற நாவலகளை படித்ததில்லை.
நீக்கு