மொழிபெயர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மொழிபெயர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 ஜனவரி 2020

ஓநாய் குலச்சின்னம் - ஜியாங் ரோங்

சீனாவில் வெளிவந்து விற்பனையில் சாதனை படைத்த நாவல். தமிழில் சி. மோகன் மொழிபெயர்த்துள்ளார்.

தலைப்பை பார்த்தவுடன் எவ்வித பிம்பமும் கிடைக்காத நாவல்கள் பல உண்டு. அதில் இதுவு ஒன்று. ஆங்கிலத்தில் Wolf Totem என்ற பெயரில் வெளிவந்த நாவல். Totem என்பதை குலமரபு என்று கூகுள் மொழி பெயர்க்கின்றது. ஓரளவிற்கு அது சரியாக வருகின்றது. நாவலின் உள்ளேயும் அதையே பயன்படுத்தியிருந்தால் இன்னும் எளிதாக இருந்திருக்கும். குலச்சின்னம் என்றால் ஏதோ ஒருவர் ஒரு பெரிய பதாகையை பிடித்து கொண்டு போவது போல தோன்றுகின்றது. 

முதலில்  சில செய்திகளைப் பார்க்கலாம். 

ஆஸ்திரேலியாவில் ஒட்டகங்களை கொல்ல முடிவு. ஒட்டகங்கள் அதிகமாக பெருகி, அங்கிர்ந்த நீர் நிலைகளை அனைத்தையும் காலி செய்வதால் அவற்றைக் கொல்ல முடிவு. ஒட்டகம் ஆஸ்திரேலியாவின் பூர்வீக விலங்கு அல்ல. வெளியிலிருந்து வந்தவை, இன்று அவை லட்ச்சக்கணக்கில் பெருகியுள்ளன, ரோகிங்கியாஸ் மாதிரி. 

வயலில் இருக்கும் பாம்புகளை அனைத்தையும் கொன்றதால், எலிகளின் அதிகமாகி பயிர்கள் அழிவு. 

சீனாவில் குருவிகளால் பயிர்களுக்கு சேதம் என்று மாவோ காலத்தில் அனைத்து குருவிகளும் கொல்லப்பட்டன, ஆனால் குருவிகள் பயிர்களை மட்டுமல்ல, அதில் இருக்கும் புழுக்களையும் சேர்த்து தின்கின்றன என்பதை அறிய கொஞ்சம் காலம் ஆனது, குருவிகளை விட குருவிகள் இல்லாததால் பிழைத்த  பூச்சிகள் அழித்த பயிர்கள் அதிகம். பின்னால் குருவிகளை மார்க்சியத்தின் பெயரால் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்தது.

இவை அனைத்தும் இயல்பான இயற்கை சமநிலையை மனிதன் மாற்ற முயன்றதன் விளைவு. இயற்கை தன் சமநிலையை எப்போது பேணிக் கொண்டிருக்கும். நமது முன்னோர்கள் அதை தெளிவாகவே புரிந்து வைத்திருந்தனர். அந்த சமநிலையை குலைக்கும் எவையும் பின்னாளில் மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்குகின்றன. சீனாவின் மங்கோலியப் பகுதிகளில் நடந்த அப்படிப்பட்ட நிகழ்வுகளைப் பற்றி பேசுகின்றது இந்த நாவல்.

10 மே 2017

Bhim: Lone Warrior - M.T. Vasudevan Nair

மலையாளத்தில் ரெண்டாமூழம் என்ற பெயரில் எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய மகாபாரதக்கதை. பர்வா மொழிபெயர்ப்பை படித்த பின் மற்ற மொழி பெயர்ப்புகளை படிக்க கொஞ்சம் பீதியாக இருக்கின்றது. பருவம் நூலில் அத்தனை பிழைகள். இதுவும் அதே சாகித்ய அகடமி பிரசுரம் என்பதால், ஆங்கில மொழிபெயர்ப்பையே படிப்பது உசிதம் என்று நினைத்தேன். பிறகு எப்படி ஆங்கில அறிவை வளர்ப்பதாம். அந்நூலை மலையாளத்தில் பெரும் பொருட்செலவில் திரைப்படமாக எடுக்கவிருக்கின்றார்கள் என்ற செய்தி புத்தகத்தை உடனே வாங்க தூண்டியது. இதை திரைப்படமாக்கினால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்துடனே படித்தேன்.

மகாபாரதத்தை பலரும் பலவிதமாக மாற்றி எழுதிப்பார்த்திருக்கின்றார்கள். இது முழுக்க முழுக்க பீமனனின் பார்வையில் நகரும் கதை. இரண்டாவது இடம் எப்போதும் கொஞ்சம் கடினமானது. நமக்கு முன்னாலிருப்பவனை முந்தாமல், அதே சமயம் மிகவும் பின்தங்காமல் சென்று கொண்டிருக்க வேண்டும். முதல்வனின் முட்டாள்த்தனம் தெரிந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது, அதன் விளைவுகளை பங்கு போடவும் தயாராக இருக்க வேண்டும். பீமன் இரண்டாமவன் அதை மையமாக வைத்து தலைப்பை இட்டிருக்க வேண்டும்.

பாண்டவர்களில் எனக்கு மிகவும் பிடித்த பாத்திரம் பீமன். குழந்தை (அ) இளம் பருவத்தில் முதன் முதலாக பாரதம் படிக்கும் எவரையும் கவரும் பாத்திரம் பீமன்தான். வலிமை. பதினாயிரம் யானைகளின் பலம் கொண்டவன் என்பதே அற்புதமான விஷயம் அல்லவா. ஆனால் பீமனுக்கு அந்த இடம் கிடைத்ததா என்பது கேள்விதான். ஆரம்பம் முதல் தர்மன் நம்புவது பீமனை மட்டுமே, கெளரவர்கள் கூட அஞ்சுவது பீமனை  மட்டுமே. ஆனால் அவனை விட அர்ஜ்ஜுனன் பெரிய வீரன் என்று கூறப்படும் இடங்களே அதிகம்.


09 ஆகஸ்ட் 2016

பருவம் - எஸ்.எல்.பைரப்பா

மகாபாரதத்தின் தனித்தன்மையே, அதை நம்மால் பல்வேறு தளங்களில் வைத்து வாசிக்க முடியும் என்பதுதான். பல்வேறு முடிச்சுகள் கொண்ட ஒரு சுவாரஸ்யமான கதையாகவும் வாசிக்க முடியும், தர்ம - அதர்ம விவாதங்களை காட்டும் ஒரு தர்ம நூலாகவும் படிக்க முடியும், முழுக்க முழுக்க ஒரு அரசியல் நூலாக, அரசுகளுக்கிடையிலான விவகாரங்கள், அரசியல் சதிகள் என்று ஒரு அரசியல் நூலாகவும் படிக்க முடியும். அனைத்தையும் விட்டு விட்டு, வெறும் மனிதர்கள், அடிப்படை மனித உணர்ச்சிகள், உறவுகள், அது காட்டும் வித்தைகள் என்று வாசிக்கலாம். அக்கால குடிமுறைகளை கூறும் நூலாகவும் படிக்கலாம். 

மகாபாரதத்தை பலர் பல கோணங்களில் எழுதியிருக்கின்றார்கள். ராஜாஜியின் எளிய சுருக்கம், சோவின் மகாபாரதம் பேசுகின்றது, அதை ஒரு தர்ம - அதர்ம விவாத நூலாகவும், அரசியல் நூலாகவும் பார்க்கின்றது. வெண்முரசு மகாபாரதத்தை பல வித கோணங்களில் காட்டும் ஒரு நூல். பாரதியாரின் பாஞ்சாலி சபதம், வில்லி பாரதம், இரண்டாம் இடம், இனி நான் உறங்கலாமா,காண்டேகரின் யயாதி, இ.பாவின் கிருஷ்ணா கிருஷ்ணா என்று இன்னும் பல ஆக்கங்கள் உள்ளன. சுமார் 300 மகாபாரத ஆக்கங்கள் இருப்பதாக கூறுகின்றனர். நண்பர் ஆர்.வி பலவித மகாபாரதக்கதைகளை தொகுத்து இங்கு அளித்துள்ளார். (அவரே பல மகாபாரத சிறுகதைகளையும் எழுதியுள்ளார்) இவற்றில் முக்கியமான ஆக்கங்களில் ஒன்று பர்வா. ஜெயமோகனும் பலவித மகாபாரத வடிவங்களை பற்றி இங்கே கூறுகின்றார்

பைரப்பா ஒரு புகழ் பெற்ற கன்னட எழுத்தாளர். அவரைப்பற்றிய ஒரு சிறப்பான அறிமுகத்தை ஜெயமோகன் எழுதியிருக்கின்றார். ஆர்வியும் சிலிக்கான் ஷெல்பில் எழுதியிருக்கின்றார்.

10 செப்டம்பர் 2015

உப்புவேலி - ராய் மாக்ஸிம்

வரலாற்று பாடம் என்பது எனக்கு எப்போதும் தலைவலியை தரும் ஒன்று. குறிப்பாக வருடங்கள். ஆறாம் வகுப்பிலோ, எட்டாம் வகுப்பிலோ, ஒரு பெரிய பகுதி. இந்திய வரலாற்றை முழுவதும் கரைத்து புகட்டும் ஆர்வத்தில் எவரோ தயாரித்தது. ஏகப்பட்ட வருடங்கள், காந்தி இர்வின் ஒப்பந்தம், மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம். தேர்வில் அப்படியே எழுதுவது என்பது, புத்தகத்தை வைத்துக் கொண்டு கூட சாத்தியமில்லாதது. என்னைப் பலரின் தூக்கத்தை கெடுத்த , பத்தாம் வகுப்பு வரை  படித்த வரலாற்றில் ஒரு வரி கூட இல்லாத ஒன்றை பற்றி பேசுகின்றது இந்த புத்தகம்.

ராய் மாக்ஸம் என்னும் ஆங்கிலேயேர் எழுதிய THE GREAT HEDGE OF INDIA என்னும் நூலின் தமிழாக்கம். தமிழில் சிறில் அலெக்ஸ் மொழி பெயர்த்துள்ளார். இப்புத்தகம் வெளிவந்த பொழுதே ஜெயமோகன் இதைப் பற்றி சிறந்த அறிமுகத்தை தந்திருந்தார். ஆங்கிலத்தை விட தமிழில் படிப்பது எனக்கு சுலபமாக இருந்தது.

இணையத்தில் கண்டதையும் படிக்க ஆரம்பித்த புதிதில் தன் விஷயங்கள் புரியாமல் இருந்தன. முக்கியமானது பலருக்கு இருக்கும் இந்திய வெறுப்பு. அவர்களை பொறுத்த வரை இந்தியா எப்போதும் சிறப்பாக இருந்ததே இல்லை. ஆங்கிலேயர்கள் வந்த பின்னால் தான் இந்தியா பல துறைகளில் முன்னேறியது. எப்படி சிலரால் அந்தளவிற்கு முட்டாள்த்தனமாக யோசிக்க முடியும் என்பது ஆச்சர்யமாகவும், பின்னர் வேடிக்கையாகவும் இருந்தது.

12 ஆகஸ்ட் 2014

லஜ்ஜா (அவமானம்) - தஸ்லிமா நஸ்ரின்

லஜ்ஜா - தஸ்லிமா நஸ்ரினின் உயிருக்கு விலை வைத்த புத்தகம். இப்போது தமிழில். கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஜவர்லால் (ஜவகர்லால் இல்லை) மொழி பெயர்த்துள்ளார். 

உலகெங்கும் பரபரப்பை கிளப்பிய புத்தகம் என்று கூறப்படுகின்றது. நமது உள்ளூர் (இந்து) மதச்சார்பற்றவர்களுக்கு பங்களாதேசத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக தஸ்லிமா நஸ்ரின் தொடுத்த போரை எதிர்த்து போராட ஒரு வாய்ப்பை அளித்த புத்தகம். 

அவர் மீது பத்வா பிறப்பித்து, தலைக்கு விலை வைக்கும் அளவிற்கு இதில் என்ன இருக்கின்றது என்ற ஆர்வத்தில்தான் புத்தகத்தையே வாங்கினேன். ஒரு வேளை இஸ்லாமிற்கு எதிராக பல கருத்துக்கள் இருக்குமோ என்று நினைத்தால், அப்படி எதுவுமில்லை. இதற்கு பத்வா என்றால், நாட்டிலிருக்கும் பல செய்தி பத்திரிக்கைகளுக்கும் சேர்த்து பத்வா பிறப்பிக்க வேண்டும், ஊரிலிருக்கும் எல்லா செய்திபத்திரிக்கையாளர்கள் தலைக்கும் விலை வைக்க வேண்டும்.

இந்தியாவில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி எனப்படும் கட்டிடத்தை இடித்ததன் பின் விளைவை பற்றியதுதான் இக்கதை. இந்துக்களின் நிலை எல்லா நாட்டிலும் ஒரே மாதிரிதான். அவர்களுக்கு அரசியல் ஆதரவு கிடையாது. இப்போது பா.ஜ.க அசுரபலத்துடன் இருக்கின்றது. இருந்தாலும் அவர்களாலும் இந்துக்களுக்கு முழு ஆதரவு தரமுடியாது. காரணம் மதச்சார்பன்மை என்ற பெயரில் பிற கட்சிக்கள் எடுக்கும் ஓட்டு பிச்சை. இந்துக்கள் அதிகமிருக்கும் இந்தியாவில் இந்த நிலை என்றால், இந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கும் மற்ற இடங்களில், அதுவும் அடிப்படைவாதிகள் கையில் அதிகாரம் இருக்கும் இடத்தில், மற்ற மதங்களை அடியோடு வெறுக்கும் மதத்தலைவர்களின் கையில் அதிகாரம் இருக்கும் இடத்தில் இந்துக்களின் நிலை எப்படி இருக்கும். அதைத்தான் காட்டுகின்றது இப்புத்தகம்.

17 நவம்பர் 2013

ஒரு நதியின் மரணம் - மிஷல் தனினோ

முகம்மது பின் துக்ளக்கில் வரும் ஒரு காட்சி
"உங்களுக்கு தமிழ் தெரியும்ன்னு சரித்திரத்துல இல்லையே"
"உங்கள் சரித்திரம் எல்லாம் பேத்தல்"
"எங்க பசங்க படிக்கின்றதெல்லாம் பேத்தலா"
"அது உங்கள் பிள்ளைகளை பார்த்தாலே தெரியுமே"

சரித்திரம் என்பது அன்றைய தேதிக்கு கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு புனையப்படுவது. ஒரு விஷயத்தை அறிந்து கொள்ள பல வழிமுறைகள் உண்டு என்பார்கள். நேரில் பார்ப்பது, அனுமானிப்பது என்று பல வழிகள். சரித்திரத்தில் பாதி அனுமானம்தான். கல்வெட்டுகள் மட்டுமே ஒரளவு நம்பகமானது என எண்ணலாம், ஆனால் அக்கல்வெட்டுகள் இன்றைய ஆட்சியாளர்கள் தம் சாதனைகளை அடித்து விடுவது போல இருந்திருந்தால்? புலவர்களின் பாடல்கள் என்பது, இன்றைய சினிமாக்காரர்கள் முதல்வர்களை பற்றி பேசுவதை போல இருந்திருந்தால்? சரித்திரம் என்பது இது போன்று ஒன்றிரண்டு விஷயங்களை கொண்டு அறியப்படுவதில்லையே? அதே போல் முழுமையான ஆதாரங்கள் இல்லை என்பதால் மட்டும் ஒரு விஷயம் நடக்கவில்லை என்றும் கூறமுடியாது.

நமது சரித்திரம் என்பது முழுக்க முழுக்க ஆங்கிலேயர்களால் பல உள் நோக்கங்களை கொண்டு எழுதப்பட்டது. அது இங்குள்ள பலரின் பிழைப்புக்கு வசதியாக இருந்ததால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது.

அன்றைய தேதிக்கு சரித்திரம் உண்மை, நாளை அது மாறலாம். பள்ளியில் அனைவரும் படித்த ஒரு விஷயம் ஆரிய படையெடுப்பு. ஆரியர்கள் கைபர் போல கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தனர் என்பது. பின்னர் படையெடுப்பு ஆரியர் இடப்பெயர்வாகியது. நாளை என்னவாகும் யாருக்கு தெரியும்.

சரஸ்வதி நமது புராணங்களிலும், வேதங்களிலும், இதிகாசங்களிலும் போற்றப்படும் நதி. திரிவேணி சங்கமத்தில் கங்கையுடனும் யமுனையுடனும் கண்ணிற்கு தெரியாமல் கலக்கும் நதி என்று நம்பப்படும் சரஸ்வதியின் சரித்திரத்தை பற்றிய புத்தகம்.

30 ஆகஸ்ட் 2013

யயாதி - காண்டேகர்

அனைவருக்கும் ஒரு கட்டத்தில் வரும் பயம் முதுமையை பற்றியது. முதுமையின் பயம் நம் இளமையின் அழிவைக் கண்டு. பாரதம் படித்தவர்களுக்கு இளமை என்றவுடன் நினைவில் வருவது யயாதி. மகாபாரதத்தில் வரும் ஒரு சிறிய நிகழ்ச்சி யயாதியின் வாழ்க்கை. அது பாரதத்தின் ஒரு முக்கிய பகுதி. யயாதியின் மகன் புரு வழியாகத்தான் பாண்டவர்கள் / கெளரவர்களின் வம்சம் வளர்கின்றது.

அச்சிறிய பகுதியை இரண்டு பாகங்களாக விரியக் கூடிய பெரிய நாவலாக எழுத முடியும் என்பதே ஆச்சர்யம்தான். அதற்கு கண்டிப்பாக அசாத்ய கற்பனை வளம் வேண்டும். வி. எஸ். காண்டேகர் அதை சாதித்துள்ளார். ஒரு காலத்தில் பெரிய ஹீரோ எழுத்தாளர். படிப்பவர்கள் பக்கத்தில் அமர்ந்து கொண்டு அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கும் எழுத்தாளர் என்று கேள்விப் பட்டுள்ளேன். ஆனால் இப்புத்தகத்தில் அது போன்று ஏதுமில்லை.

தேவயானி அசுர குரு சுக்ராச்சாரியாரின் புதல்வி. தேவர்களின் குரு பிரகஸ்பதியின் மகன் கசன், சுக்ராச்சாரியாரிடமிருந்து சஞ்சீவீனி வித்தையை கற்றுக்கொள்ள வருகின்றான். சுக்ராச்சாரியார் அம்மந்திரத்தை கொண்டுதான் தேவர்களால் கொல்லப்படும் அசுரர்களை உயிர்ப்பித்து வருகின்றார். தேவயானி கசன் மீது அன்பு கொள்கின்றாள், கசனின் நோக்கத்தை அறிந்து அசுரர்கள் அவனை இரண்டு முறை கொல்ல, சுக்ராச்சாரியார் தன் மகளுக்காக அவனை உயிர்ப்பிக்கின்றார். கடைசியில் அவனை எரித்து சாம்பலை சுக்ராச்சாரியாருக்கு கள்ளில் கலந்து தருகின்றனர். சுக்ராச்சாரியாரின் வயிற்றில் இருந்த படி சஞ்சீவீனி வித்தையை கற்றுக் கொண்ட கசன், சுக்ராச்சாரியாரின் வயிற்றை கிளித்து வெளியே வந்து, சுக்ராச்சாரியாரை உயிர்ப்பிக்கின்றான். சுக்ராச்சாரியாரின் வயிற்றில் வாசம் செய்ததால் தேவயானி சகோதரி முறையாகின்றாள் என்று அவளின் அன்பை மறுத்து செல்கின்றான் கசன். இது ஒரு கதை