மதன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மதன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

24 மார்ச் 2017

மனிதனும் மர்மங்களும் - மதன்

ஏதோ  ஒரு பத்திரிக்கையில் தொடராக வந்திருக்கும் போல. மதன் ஒரு நல்ல கார்ட்டூனிஸ்ட், எழுத்தாளர். சுவாரஸ்யமான எழுத்தாளர். ஆனால் எதைப்பற்றி அவர் எழுதுகின்றார் என்பதை பொறுத்தே அதை படிக்கலாமா வேண்டாமா என்று நாம் முடிவு செய்ய வேண்டும். இது அவர் படித்த பல புத்தகங்களில் எக்ஸ்ட்ராக்ட். சாறு.

இன்றும் சுவாரஸ்யமான ஒரு விஷயம் பேய்கள். அந்த பேய்களை பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள். வழக்கம்போல அனைத்தும் வெளிநாட்டு பேய்கள். விதவிதமான பேய் அனுபவங்கள். பல வித சக்தி கொண்ட மனிதர்களை பற்றிய தகவல்கள். மீன் மழை, தவளை மழை, பெரிய ஐஸ் கட்டி மழை. ஏலியன்கள் பற்றிய கட்டுரைகள்.

அனைத்து கட்டுரைகளும் சுவாரஸ்யமான நடையில் எழுதியிருக்கின்றர். ஜாலியாக பக்கத்தில் அமர்ந்து கொண்டு பேசும் எழுத்து நடை. அப்புறம் அந்த பேய் வந்து ஒரே அடி, சே என்ற மாதிரி எழுதிக் கொண்டு போகும் போது படிக்க நன்றாகத்தான் இருக்கின்றது. இந்தியப்பேய்களை பற்றி ஒன்றுமே காணோம். ஒரு வேளை எழுத ஆரம்பித்தால் பக்கம் பத்தாது என்று விட்டு விட்டு போய்விட்டார் போல.

சுவாரஸ்யமான புத்தகம்.

23 மார்ச் 2017

கிமு கிபி - மதன்

மதனின் பிரச்சினை அவர் படிக்கும் வரலாறு அனைத்து பாரதக்கண்டத்திற்கு வெளியேதான் இருக்கும். கில்காமேஷ் வரலாறு, ராமாயணம் புராணம் என்ற வகையில் தான் அவர் பார்வை போகின்றது. இந்தியப்புராணங்கள் பற்றி அவர் எங்கும் எதுவும் பேசுவதில்லை. அதை வெறும் கதை என்று மட்டும் ஒதுக்க முடியுமா என்ன? ஒரு முறை விகடனில் ஹாய் மதனில், பூமாதேவிக்கும் இரண்யகசிபுவிற்கும் பிறந்தவன் நரகாசுரன் என்று எழுதியிருந்தார். இன்னும் சில பல தவறுகளும் தொடர்ந்து வெளியாகி கொண்டிருந்த நினைவு. 

கிமு கிபி என்ற பெயரில் மனித குல வரலாற்றை சொல்லும் புத்தகம் என்றே முன்னுரை சொல்கின்றது. மனிதன் எவ்வாறு தோன்றினான், நாகரீகம் எப்படி வளர்ந்தது என்பதை பற்றியெல்லாம் வெகுவிரிவாக பேசுவதாக் குறிப்பு சொல்கின்றது. நாகரீகம் போன்றவை என்றாலே அவை இந்தியாவிற்கு வெளியில்தானே இருக்க வேண்டும். பாபிலோன், கில்காமேஷ் என்று மந்திய ஆசிய புராண வரலாறுகளை பற்றி விரிவாக பேசுகின்றது. கிமுவிற்கு முற்பட்ட காலத்தில் பாபிலோனில் நாகரீகம் செழித்து வளர்ந்த காலத்தில், இந்தியாவில் ஒன்றுமே கிடையாது. சிறு சிறு கூட்டங்கள் மட்டுமே இருந்தன என்று கூறப்பட்ட பகுதிகள் வந்தவுடன் படித்து கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு அடுத்த வேலையை பார்க்க சென்றுவிட்டேன். மேற்கொண்டு புத்தகம் எப்படி இருக்கும் என்பது தெரிந்துவிட்டது. 

மேற்கொண்டு ஏதும் சொல்வதற்கில்லை.

யாராவது படித்தவர்கள் உருப்படியாக ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் கேட்டுக் கொள்கின்றேன்