அமர்நாத் யாத்திரை சென்ற ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு சிலர் உயிரை இழந்துள்ளனர். ஹிந்துக்களின் ரத்தம் அவர்கள் ஹிந்துக்களாக இருப்பதன் காரணத்தால் மட்டுமே சிந்தப்படுவது இன்று நேற்றல்ல பல நூறு ஆண்டுகளாகவே நடந்து வரும் துயரம். அதுவும் ஹிந்துக்களின் பூர்வீக பூமியான நமது பாரதத்தில். முதல் காரணம், ஹிந்து மதம்தான். வியப்பாக இருந்தாலும் அதுதான் உண்மை. ஹிந்துக்களுக்கே உரித்தான பெருந்தன்மை, தர்மத்தின்பாலிருக்கும் பற்று, நேர்மை அதுவே இன்று இந்த நிலைமையை உண்டாக்கிவிட்டது. ஆனால் தர்மம் என்றும் தன்னை நம்பியவர்களை கைவிடாது என்பதே நமக்கு போதிக்கப்பட்டது. அதை சரித்திரம் பல முறை நிரூபித்து வருகின்றது. இல்லை என்றால் இன்று ஹிந்து மதம் என்ற ஒன்றே இல்லாமல் போயிருக்கும். ஹிந்து மதம் என்பதே கிடையாது என்று உளரும் முட்டாள்கள் யாராவது துரதிருஷ்டவசமாக இதை படிக்க நேர்ந்தால், மூடி வைத்துவிட்டு கிளம்பலாம்.
நாட்டில் மதக்கலவரம் வரும் போது நமது டம்ப்ளர்களும், புர்ச்சியாளர்களும், பஹூத்தறிவாளர்களும் கூறுவது, பெரியார் மண். இங்கு இஸ்லாமியனும் நானும் சகோதரன். ஒரு மண்ணும் கிடையாது. முக்கியக்காரணத்தை தமிழர்களுக்கு பிடித்த சினிமா வசனத்தாலேயே காட்டலாம், ஹே ராமில் வரும் ஒரு வசனம், "நீ ஒரு செளத் இண்டியன், என் வேதனை உனக்கு புரியாது ராம்". அதுதான். வட இந்தியா அந்நிய படையெடுப்பின் வலியை முழுவதும் தாங்கியுள்ளது. அதன் வலி அவர்களுக்கு தலைமுறை கடந்தும் இருக்கின்றது.
அந்த வலியை ஆரம்பம் முதல் கூறுகின்றது. எப்படி கொஞ்சம் கொஞ்சமாக நமது பாரதம் விழுந்தது. எத்தனை கோவில்கள் இடிக்கப்பட்டன. கோரி, கஜினி, கில்ஜி, துக்ளக், பக்தியார், குத்புதீன் என்று ஒவ்வொரு அரசனும் செய்த அக்கிரமங்கள். இடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கோவில்கள். காசி, மதுரா, ஹம்பி. சோம்நாத் கோவிலின் ரத்த பக்கங்கள இங்கு எத்தனை பேருக்கு தெரியும். சோம்நாத் ஐம்பதினாயிரத்திற்கும் மேற்ப்பட்டவர்களை கொன்று இடிக்கப்பட்ட கோவில். பெயர் அறியாத எத்தனை கோவில்கள், ஹிந்துக்கள்.


