31 ஜூலை 2020

காணாமல் போன பை

இந்த ப்ளாக் ஆரம்பித்த புதிதில் எழுதி வைத்தது, அப்படியே புதைந்து போனது. இன்று அகழ்வார்ய்ச்சியில் கிடைத்தது. சராசரிக்கும் மோசமான கதைதான், இருக்கட்டுமே என்ன இப்போ.....


"லாரில போங்கய்யா"

பஸ் ஸ்டாண்டில் எங்கள் கூட்டத்தை கண்டவுடன் டபுள் விசில் குடுத்து பறந்தது பஸ். காரணம்  பதினைந்து பேர், நாற்பது பெட்டி, பைகள். தவிர ஐந்து (இல்லை ஏழு, எட்டு, நினைவில்லை விடுங்கள்) குழந்தைகள். திருச்சிக்கு ஒரு திருமணத்திற்கு போய்விட்டு வந்திறங்கினோம். 

"பேசாம ஒரு வேன் பிடிச்சி போய்டலாமா?"

"வேண்டாம் ஒரு ஆட்டோல லக்கேஜ் எல்லாம் போட்டு விட்டுட்டு நாம பஸ்ல போய்டலாம்"

"ம்கும் ஆட்டோ, ஒரு மினி டோர் கூட பத்தாது"

"ஒன்னும் வேண்டாம், இப்போ ஒரு ப்ரைவேட் பஸ் வரும் போலாம்"

"இப்ப லாரில போங்கன்னு சொல்லிட்டு போனானே அதுதான் நீங்க சொன்ன பஸ்"

"அப்படியா"

19 ஜூலை 2020

நாரத ராமாயணம் - புதுமைபித்தன்


கிண்டிலில் மேய்ந்து கொண்டிருந்த போது நாரத ராமாயணம் என்று ஒன்று கண்ணில் பட்டது. புதுமை பித்தன் எழுதியது. ஒரு முறை சரிபார்த்து கொண்டேன், ஒரிஜினல் புதுமைபித்தன் தான் என்று. 300 வகை ராமாயணங்கள் உண்டு என்பார்கள். ராமரை அனைவரும் சொந்தம் கொண்டாடியதன் விளைவு. ஜைனர்கள், புத்தர்கள் என்று அனைவரும் ராமரை அவரவர் வசதிக்கு மாற்றி கொண்டார்கள். திராவிட புத்திசாலிகள், பிராமண ராவணனை சொந்தக்காரனாக்கி, ராவண காவியம் எழுதிக் கொண்டார்கள். 

புதுமைபித்தன் கிண்டலான எழுத்துக்கு சொந்தக்காரர். புதுமைபித்தன் நடை திருவிளையாடல் சிவாஜி  நடையை விட பிரபலமானது என்பதால் என்ன எழுதியிருக்கின்றார் என்று படிப்போம் என்று படித்தால், சரியான திராபை.

கடவுளும் கந்தசாமி பிள்ளையும், அகல்யை, காஞ்சனை போன்றவற்றை எழுதியவரா இதையும் எழுதினார் என்றுதான் நினைக்க வேண்டியிருக்கின்றது. ஹிந்து மதத்தில் கடவுள்களை ஜாலியாக நாம் கிண்டல் செய்யலாம், திட்டலாம். (பக்தியுடன் அவனை நம்பும் பக்தர்களுக்குதான் அந்த உரிமை, நம்பாத பொறுக்கிகளுக்கு இல்லை), அதனால் முதல் பகுதி கொஞ்சம் சுவாரஸ்யமாகவே இருந்தது. வயதான ராமருக்கு போரடிக்கின்றது. அதனால் மீண்டும் காட்டிற்கு சீதையுடனும், அனுமனுடனும் போகின்றார். வேறு ஏதாவது அரக்கன் வருவான், அவனுடன் போர் செய்யலாம் என்று. அனுமனுக்கு பர்ணசாலை கட்ட தெரியவில்லை என்று கொஞ்சம் ஜாலியா போகின்றது. 

17 ஜூலை 2020

பாலகுமாரன் - சில நாவல்கள்

கிண்டில் அன்லிமிட்டடில் கங்கை கொண்ட சோழன் படிக்கலாம் என்று நினைத்தால், கடைசி பாகத்தை மட்டும் அன்லிமிட்டடில் வைக்கவில்லை. வியாபார உத்தி போல. லைப்ரேரியில் முடிவு பகுதியை கிழித்து வைக்கும் ஆசாமி யாரோ ஐடியா கொடுத்துள்ளார். சரி போகட்டும், உடையார் எப்படி என்றால், அதில் சில பகுதிகளை காணவேயில்லை. சரி கிடைத்த சில நாவல்களை படிக்கலாம் என்று படித்தேன்.

பந்தயப்புறா

பாலகுமாரனைப் படித்து தெளிந்தேன், குரு என்றெல்லாம் பலர் பேசுவதற்கு காரணம், இது போன்ற நாவல்கள்தான். 80களில் இருந்த சூழல் இன்று எந்தளவிற்கு மாறியுள்ளது என்று தெரியவில்லை. ஒரு பெண் தன் தடைகளை விட்டு விலகி பறக்க நினைப்பதும், பறப்பதும்தான் கதை. புதிதாக வேலைக்கு சேரும் ஒருவருக்கு கிடைக்கும் அனுபவங்கள், அங்குள்ளவர்களின் முறைப்புகள், தரப்படும் சில வெட்டி வேலைகள் எல்லாம் பலரை நாவலுடன் தன்னை இணைத்து கொள்ள செய்யும். நான் முதன் முதலில் வேலைக்கு சென்றதுதான் நினைவிற்கு வந்தது. எனக்கு என்ன வேலை தருவது என்று தெரியாமல், சில நூறு பக்க ரிப்போர்ட்களை டைப் செய்ய சொன்னார்கள். வெட்டியாக அதையும் செய்து கொண்டிருந்தேன். இதில் பாலகுமாரனின் மனைவி ஒரு பாத்திரமாக வருகின்றார், சுயவிமர்சனம் போல. இறுதியில் வரும் காதல் எல்லாம் சினிமாக்கு லாயக்கான கதை. இருந்தும் ஓரளவிற்கு நல்ல நாவல்.

12 ஜூலை 2020

பாம்பு - சிறுகதை

சும்மா, டச் விட்டு போகக்கூடது என்பதற்கு எழுதி பார்த்தது. 

ராஜு வாட்ஸாப்பில் வந்த வடிவேலு மீம்ஸை பார்த்துவிட்டு மோடியை திட்டிக் கொண்டிருந்த பொழுது, கதவை திறந்து கொண்டு வினோத் வந்தான். 

"வாட்ஸாப்ல வர குப்பைய படிக்கிறத நிறுத்து, அப்பதான் மூளை வளரும், வா வேலை வந்திருக்கு"

"என்ன அண்ணா எங்க தீப்பிடிச்சிருக்கு"

"ஏண்டா, தீப்பிடிச்சா மட்டும்தான் கூப்பிடுவாங்கன்னு உனக்கு எவன் சொன்னது. எல்லா ஆபத்துக்கும் நம்மளதான் கூப்பிடுவாங்க. போலீஸிக்கு அப்புறம்  நாமதான்,வா வா" 

"அண்ண எதுல போறது"

"ஜீப்ப எடு"

"எங்க போறோம்"

"அங்க புது அப்பார்ட்மென்ட் இருக்குல்ல, அங்க ஏதோ பாம்பு வந்திருச்சாம் அதான் பயந்து போய் போன் பண்ணுனாங்க"

ராஜு கொஞ்சம் மிரண்டது தெரிந்தது. "நாமதான் பிடிக்கனுமா, ஏன ஃபாரஸ்ட் டிபார்ட்மென்ட்ல இருந்து வரமாட்டாங்களா?"