முழுவதும் படிக்க முடியவில்லை. படித்தவரை ஒன்றும் புரியவில்லை. மகாபரதக்கதை கொஞ்சமே கொஞ்சம் வருவதால் பரவாயில்லை. பிறகு படிக்கலாம்.
ஜெயமோகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜெயமோகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
22 அக்டோபர் 2018
20 அக்டோபர் 2016
வெய்யோன் - ஜெயமோகன்
வெய்யோன்
ஜெயமோகன் எழுதும் வெண்முரசின் ஒன்பதாவது நாவல். இதன் பிறகு இரண்டு நூல்கள் வெளிவந்துவிட்டது.
வெண்முரசின் முக்கிய அம்சம் பாரதத்தை பல்வேறு கோணங்களில் பார்ப்பதே. விடுபட்ட கண்ணிகளை சேர்க்கும் ஒரு முயற்சி. சிறிய பாத்திரங்கள் பெரிதாக விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றார்கள். வெய்யோன், கர்ணனை இன்னும் சற்று அருகில் சென்று பார்க்கும் ஒரு முயற்சி.
வெய்யோன், கர்ணனை நாயகனாக வைத்து எழுதப்பட்ட நாவல். நட்பிற்கு இலக்கணமாக கூறப்படும் கர்ணனின் பெயரைக்கேட்டதும், சிவாஜி கணேசன், கண்களை மூடிக்கொண்டு அம்மா, அம்மா என்று அழுது புலம்புவதும், சிவாஜி மீசையை முறுக்கிக்கொண்டு கர்ஜிப்பதோ அல்லது சிவப்பு விளக்கு மேனியில் பட்டு ஜொலிக்க வேதனையை காட்டுவதோ நினைவில் வந்தால் நீங்கள் கண்டிப்பாக பாரதத்தையும், வெய்யோனையும் படிக்க வேண்டும். காரணம் இரண்டிற்குமான வித்தியாசம். வயதிலிருந்து காட்சிகள் வரை. கர்ணன் ஒரு நல்ல திரைப்படம்தான் (நமக்கேன் வம்பு).
வெண்முரசு வரிசையில் வெண்முகில் நகரத்திற்கு பின்னால் வந்த இரண்டு நாவல்களும் பாரதத்தின் மைய கதையை விட்டு வெகுதூரம் தள்ளிப் போய்விட்டது. தனி நாவலாக சரிதான். ஆனால் வெண்முரசின் வரிசையில் வைத்து பார்த்தால் ஒரு பெரிய இடைவெளி. இந்நாவல் அந்த இடைவெளியை இன்னும் கொஞ்சம் பெரிதாக்கியுள்ளது.
18 ஜூலை 2016
காண்டீபம் - ஜெயமோகன்
மகாபாரத வரிசையில் இந்திரநீலத்திற்கு அடுத்த நூல்.
காண்டீபம், பாரதத்தின் கதையோட்டத்திலிருது விலகி செல்லும் ஒரு நாவல். வெண்முகில் நகரத்திற்கு பின் கதை வெகுதூரம் விலகி விட்டது. இந்திரநீலம். கிருஷ்ணனின் திருமணங்களை பற்றி கதை. பெண்களை வென்ற கதை. காண்டீபம் அர்ஜுனனின் திருமணங்களை பற்றியகதை.
பாரதத்தில் மிகவும் குழப்பமான ஒரு விஷயம். காலம். வருடங்களின் கணக்குகள் எல்லாம் மிகவும் குழப்பமானவை. பல கதைகளின் இடைச்சொருகல்கள் காரணமாக நேர்ந்திருக்கலாம். அதே சமயம் எவை இடைச்சொருகல் என்று காண்பது எளிதல்ல. எவற்றையும் ஒதுக்க முடியாது. ஜெயமோகன், இம்மாதிரி விஷய்ங்களுக்கு கையாளும் உத்தி சூதர் கதைகள். நம்ப முடியாத கதைகளை சூதர்கள் சொல்வதாக அமைத்து விட்டால் ஒரு தொல்லை விட்டது.
அர்ஜுனன். பாண்டவர்களில் தேடல் நிறைந்தவன். பாரதம் முழுக்க திரிந்தவன். காண்டீபம் அர்ஜுனனின் வில். காண்டீபனின் கதையை சொல்வது காண்டீபம்.
காண்டீபம், பாரதத்தின் கதையோட்டத்திலிருது விலகி செல்லும் ஒரு நாவல். வெண்முகில் நகரத்திற்கு பின் கதை வெகுதூரம் விலகி விட்டது. இந்திரநீலம். கிருஷ்ணனின் திருமணங்களை பற்றி கதை. பெண்களை வென்ற கதை. காண்டீபம் அர்ஜுனனின் திருமணங்களை பற்றியகதை.
பாரதத்தில் மிகவும் குழப்பமான ஒரு விஷயம். காலம். வருடங்களின் கணக்குகள் எல்லாம் மிகவும் குழப்பமானவை. பல கதைகளின் இடைச்சொருகல்கள் காரணமாக நேர்ந்திருக்கலாம். அதே சமயம் எவை இடைச்சொருகல் என்று காண்பது எளிதல்ல. எவற்றையும் ஒதுக்க முடியாது. ஜெயமோகன், இம்மாதிரி விஷய்ங்களுக்கு கையாளும் உத்தி சூதர் கதைகள். நம்ப முடியாத கதைகளை சூதர்கள் சொல்வதாக அமைத்து விட்டால் ஒரு தொல்லை விட்டது.
அர்ஜுனன். பாண்டவர்களில் தேடல் நிறைந்தவன். பாரதம் முழுக்க திரிந்தவன். காண்டீபம் அர்ஜுனனின் வில். காண்டீபனின் கதையை சொல்வது காண்டீபம்.
13 ஜூலை 2016
இந்திரநீலம் - ஜெயமோகன்
நீலத்திற்கு பின்னால் கிருஷ்ணனை நாயகனாக கொண்ட நாவல். கிருஷ்ணனின் திருமணங்கள் பற்றிய புத்தகம்.
ஒவ்வொரு நாவலுக்கும் ஒவ்வொரு வகையான கதை சொல்லலை எடுத்துகொள்ளும் ஜெயமோகன், இதில் எடுத்துகொண்டது, சியமந்தகம். சியமந்தகத்தின் கதையே ஒரு சுவாரஸ்யமான கதை. என் பெண்ணிற்கு பல நாள் அக்கதையை சொல்லியிருக்கின்றேன். இ.பாவும் இக்கதையை கிருஷ்ணா கிருஷ்ணாவில் எழுதியுள்ளார். ஆனால் அதை வேறு கோணத்தில் காட்டி, அதை மையமாக வைத்துக் கொண்டு, கிருஷ்ணனின் திருமணங்களின் கதைகளையும், யாதவர்களின் அரசியலையும் கூறுகின்றார். வெண்முகில் நகரத்திற்கு பூரிசிரவஸ் போல இதில் திருஷ்டத்துய்மன்.
வழக்கம் போல ஒரு சூதர் கதையுடன் ஆரம்பிக்கின்றது.விஸ்வாமித்திரரின் கதை. திருஷ்டத்துய்மன் துவாரகைக்கு போகின்றான். அவனும் அங்குள்ள அரசியல் சூழலில் மாட்டிக் கொண்டு, கிருஷ்ணனை அறிகின்றான், தன்னையும் சுப்ரை மீதிருக்கும் தன் காதலையும் அறிகின்றான்.
வழக்கம் போல ஒரு சூதர் கதையுடன் ஆரம்பிக்கின்றது.விஸ்வாமித்திரரின் கதை. திருஷ்டத்துய்மன் துவாரகைக்கு போகின்றான். அவனும் அங்குள்ள அரசியல் சூழலில் மாட்டிக் கொண்டு, கிருஷ்ணனை அறிகின்றான், தன்னையும் சுப்ரை மீதிருக்கும் தன் காதலையும் அறிகின்றான்.
01 மார்ச் 2016
வெண்முகில் நகரம் - ஜெயமோகன்
வெண்முகில் நகரம் - வெண்முரசு வரிசையின் ஆறாவது நாவல். அதற்கடுத்து இரண்டு புத்தகங்கள் வந்துவிட்டன. புத்தகம் வந்த கையோடு எனது மடிக்கணிணி வேலை செய்ய மறுத்து விட்டது. ஒரு சில ’கீ’க்கள் மட்டும் வைகுண்டம் போய் விட்டது. ஒரு வழியாக சரியாகி வந்த பின் வேறு புத்தகங்கள் வந்துவிட்டது.
நாவல் வந்து பல நாள் ஆகிவிட்டது. அனைவரும் படித்திருப்பார்கள். இருந்தும் எழுதுவதன் காரணம் என்ன. ஒரு விஷயத்தை எழுதும் போது, நமக்கே தெரியாத, தோன்றாத பல புதிய விஷயங்கள் தோன்றும். சில குழப்பங்கள் தெளிந்து ஒரு கோர்வையாக ஒரு பார்வை கிடைக்கும். பிரயாகையை பற்றி எழுத ஆரம்பித்த பின்னரே அதில் வரும் வித விதமான தந்தைகளை பற்றிய பார்வை கிடைத்தது.
05 செப்டம்பர் 2015
வெண்முரசு - பிரயாகை - ஜெயமோகன்
கடந்த திங்களன்று மதுரை புத்தக கண்காட்சி செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதிகம் கண்ணில் பட்டவை இரண்டு. முதல் இடம் பொன்னியின் செல்வனுக்குதான். பெரும்பாலான அரங்குகளில் பொன்னியின் செல்வன். வித விதமான வடிவங்களில், படங்களுடன், படங்கள் இல்லாமல், பல வடிவங்களில். இரண்டாவது வெண்முரசு. நற்றிணையிலும், கிழக்கிலும் திரும்பிய பக்கமெங்கும் வெண்முரசு.
வெண்முரசு வரிசையில் ஐந்தாவது நாவல். முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம், பிரயாகை. இருப்பதிலேயே நீலம் சிறிய புத்தகம் என்றாலும், இரண்டு முறை முழுவதும் படித்திருந்தாலும் மனதில் அது முழுவதும் சென்று அமரவில்லை. பெரும்பாலும் அதை பயணத்தின் போது படித்ததால் வந்த விளைவாக இருக்கும். ஒரு நாள் முழுவதையும் முழுக்க முழுக்க செலவிட்டு படிக்கவேண்டும்.
பிரயாகை, பாஞ்சாலியின் கதை, அவளின் ஆளுமையை காட்டும் கதை, என்று கூறப்பட்டாலும், கதை முழுக்க அவளில்லை. அவள் வரும் நேரம் கொஞ்சம் என்றாலும் அவளின் பாத்திரம் விஸ்வரூபமடைந்து, தான் யார் என்று காட்டிவிடுகின்றாள்.
துருவனின் கதையுடன் ஆரம்பமாகின்றது பிரயகை. சிறுவயதில் கேட்ட கதை. சிறுவயதில் கேட்கும் போது, ஒரு பரிதாப சிறுவன் என்றுதான் தோன்றியிருக்கும். யாருக்கும் கிடைக்காத ஒரு இடத்தை பெற்றவன், என்றும் மாறா உறுதி கொண்டவன். அவனே இக்கதையின் ஆரம்பம்.
வெண்முரசு வரிசையில் ஐந்தாவது நாவல். முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம், பிரயாகை. இருப்பதிலேயே நீலம் சிறிய புத்தகம் என்றாலும், இரண்டு முறை முழுவதும் படித்திருந்தாலும் மனதில் அது முழுவதும் சென்று அமரவில்லை. பெரும்பாலும் அதை பயணத்தின் போது படித்ததால் வந்த விளைவாக இருக்கும். ஒரு நாள் முழுவதையும் முழுக்க முழுக்க செலவிட்டு படிக்கவேண்டும்.
பிரயாகை, பாஞ்சாலியின் கதை, அவளின் ஆளுமையை காட்டும் கதை, என்று கூறப்பட்டாலும், கதை முழுக்க அவளில்லை. அவள் வரும் நேரம் கொஞ்சம் என்றாலும் அவளின் பாத்திரம் விஸ்வரூபமடைந்து, தான் யார் என்று காட்டிவிடுகின்றாள்.
துருவனின் கதையுடன் ஆரம்பமாகின்றது பிரயகை. சிறுவயதில் கேட்ட கதை. சிறுவயதில் கேட்கும் போது, ஒரு பரிதாப சிறுவன் என்றுதான் தோன்றியிருக்கும். யாருக்கும் கிடைக்காத ஒரு இடத்தை பெற்றவன், என்றும் மாறா உறுதி கொண்டவன். அவனே இக்கதையின் ஆரம்பம்.
21 பிப்ரவரி 2015
வெண்முரசு - வண்ணக்கடல் - ஜெயமோகன்
மழைப்பாடலின் அரசியல் விளையாட்டிற்கு பின் வரும் நாவல். மனித உணர்ச்சிகளும், அரசியலும் கலந்த நூல்.
இந்த நூலில் கதை சொல்ல ஒரு வித்தியாசமான முறையை எடுத்து கொண்டுள்ளார். இளநாகன் என்னும் பாணன், தென் தமிழகத்திலிருந்து அஸ்தினாபுரியை நோக்கி பயணிக்கின்றான். அவன் வழியே கதை சொல்லப்படுகின்றது. உண்மையான அஸ்தினாபுரியை விட பாணர்கள் உண்டாக்கிய அஸ்தினாபுரிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக காட்டுகின்றார். இள நாகனின் வழி அக்கால பாரத்தின் பகுதிகளை காட்டுகின்றார். மாறும் அரசுகள், உணவு பழக்கங்கள், கால நிலைகள், வணிகங்கள், கட்டிடக்கலை, வெவ்வேறு வழிபாட்டு முறைகள் என்று ஒரு பெரிய சித்திரத்தை தருகின்றார் ஆசிரியர். இளநாகனின் காலமும், மகாபாரத்தின் காலமும் வெவ்வேறு என்பதை சிறு சிறு குறிப்புகள் மூலம் தெளிவு படுத்துகின்றார்.
வெண்முரசில் வரும் பாத்திரங்களின் மாற்றமே மிகவும் கவனிக்கத்தக்கது. மனித மனங்களின் கோணல்களை மிக தெளிவாக காட்டுகின்றது. நூறு சதம் நல்லவன் நூறு சதம் கெட்டவன் என்று யாரும் இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலை ஒருவனை மாற்ற முயலும், மனதில் உறுதியுள்ளவன் அதிலிருந்து தப்பிக்கலாம், இல்லை அதனுடன் சென்று ஓடலாம். துரியோதனன் பீமன் வரும் ஆரம்ப காட்சிகள் மெதுவாக மாறி இருவரும் மாறும் இடம், தர்க்க ரீதியாக விளக்கப்பட்டுள்ளது.
14 பிப்ரவரி 2015
வெண்முரசு - மழைப்பாடல் - ஜெயமோகன்
வெண்முரசு நாவல் வரிசையில் இரண்டாவது நாவல்.
மகாபாரதத்தை ஒருவர் தன் கற்பனையில் விவரித்து எழுத முடிவு செய்தால் அவருக்கு ஒரு ஆயுள் போதாது, ஏனென்றால் அவ்வளவு பாத்திரங்கள், ஒவ்வொரு பாத்திரமும் தனித்தன்மை வாய்ந்தது. பல தலைமுறைகளை தொட்டு செல்லும் கதை. அதை அனாயசமாக செய்து வருகின்றார் ஜெயமோகன். இரண்டாவது புத்தகத்தை படித்துவிட்டு அதைப்பற்றி சிறிய குறிப்பை எழுத இவ்வளவு நாளாகிவிட்டது. அவர் ஆறாவது நூலுக்கு சென்றுவிட்டார். ஐந்தாவது நூல் அச்சிற்கு தயாராகிவிட்டதது. அது கைக்கு வந்து படித்து முடிக்கும் முன் ஏழாவது நூல் வந்துவிடும். படிப்பவர்களின் ஈகோவை கிளறிவிடுகின்றார்.
முதற்கனல், மகாபாரதத்தின் விதை,முதல் தலைமுறை பாத்திரங்களை பற்றி பேசுகின்றது. இரண்டாம் நாவல் அடுத்த தலைமுறை பாத்திரங்களை விவரிக்கின்றது. பாண்டு, திருதராஷ்டிரன், விதுரன், சகுனி, காந்தாரி, குந்தி இவர்களே முக்கிய பாத்திரங்கள். அதிக கவனம் பெறாத, பாரதக்கதை தெரிந்தவர்கள் கூட அதிகம் கவலைப்படாத பாத்திரங்களுக்கும் இதில் இடமுள்ளதே இதன் சிறப்பு.
இரண்டு சின்ன சம்பவங்களாக படித்த பல இதில் பெரிதாக விவரிக்கப்பட்டுள்ளன. தலைப்பிற்கேற்ப மழை புத்தகம் முழுவதும் பெய்து கொண்டே இருக்கின்றது. பக்ககங்கள் ஈரமாகாததுதான் பாக்கி.
முதற்கனல் உணர்ச்சிகரமான, நாடகீய காட்சிகள் நிறைந்த ஒரு நூல். அதில் மனித உணர்ச்சிகள், அவற்றின் கொந்தளிப்புகள் அதிகம். மாறாக மழைப்பாடலில் அரசியல்,தர்க்கம் அதிகம் இடம்பெறுகின்றது.
முதற்கனல் உணர்ச்சிகரமான, நாடகீய காட்சிகள் நிறைந்த ஒரு நூல். அதில் மனித உணர்ச்சிகள், அவற்றின் கொந்தளிப்புகள் அதிகம். மாறாக மழைப்பாடலில் அரசியல்,தர்க்கம் அதிகம் இடம்பெறுகின்றது.
17 செப்டம்பர் 2014
பின் தொடரும் நிழலின் குரல் - ஜெயமோகன்
புகாரின். லெனின் குழுவிலிருந்த முக்கிய நபர். கம்யூனிச அரசை கட்டமைத்த ஒரு முக்கிய தலைவர். அதே கம்யூனிச அரசால் துரோகி என தண்டிக்கப்பட்டவர். ஆனால் அவர் குற்றமற்றவர் என்று முப்பது ஆண்டுகளுக்கு பின்னால் அறிவிக்கப்பட்டது. அக்கதையை ஒரு இழையாக வைத்து சுற்றி பல வித இழைகளல் பின்னப்பட்டது இக்கதை.
அரசியல் நாவல் என்றவுடன் தயங்கி தயங்கியே வாங்கினேன். அதுவும் ரஷ்ய நாட்டு தலைவரை பற்றிய கதை என்றவுடன் ஒரு மாதிரி செயற்கையாக இருக்குமோ என்ற எண்ணம் வேறு இருந்தது. (ஏதாவது மொழி பெயர்ப்பு புத்தகம் போல இருந்து வைத்தால் என்ன செய்வது என்ற எண்ணம்). ஜெயமோகன் என்னும் பெயரை நம்பி களத்தில் இறங்கினேன். நம்பினார் கெடுவதில்லை. கொஞ்சம் கூட தொய்வடையாமல், நடு இரவு தாண்டிய பின்னும் படிக்க வைத்த புத்தகம், இரவு இரண்டு மணி, மூன்று மணி வரை. எந்த புத்தகத்தையும் அடுத்தடுத்து படித்ததில்லை, இது என்னை மூன்று முறை தொடர்ச்சியாக படிக்க வைத்துவிட்டது.
வெகுநாட்களுக்கு நாவல் என்றால் தொடர்கதை என்பதுதான் எண்ணம். கல்கி, சுஜாதா இவர்களின் புத்தகங்கள் அனைத்தும் தொடர்கதைகள் என்பதால் அந்த எண்ணம் அப்படியே இருந்தது. படித்த ஒன்றிரண்டு ஜெயகாந்தனின் நாவல்களும் தொடர்கதைகளாக வந்தவையே. அந்த எண்ணத்தை உடைத்தெறிந்தவர் அசோகமித்திரன். அவரின் பதினெட்டாம் அட்சக்கோடு, இப்படியும் நாவல் எழுத முடியுமா என்று வியப்பை தந்தது, அடுத்தடுத்து அவரது கரைந்த நிழல்கள், ஒற்றன், தண்ணீர் எல்லாம் ஒவ்வொன்று ஒவ்வொரு வகை. நாவலின் பல சாத்தியங்களை உணர வைத்தது. இது மற்று மொரு சாத்தியம். நாவல்களில் விவாதங்கள் வருவதுண்டு, ஜெயகாந்தன் கதைகளில், இந்திரா பார்த்தசாரதி கதைகளில். ஆனால் அவை அனைத்தும் என் பார்வையில் வறண்டு போனவை. அதில் எவ்வித உயிர்ப்பும் இல்லை, ஒரு பிரச்சாரம். இந்த நாவல், அனைத்து சாத்தியங்களையும் கையாண்டுள்ளது, சிறுகதை, நாடகம், அபத்த நாடகம், கடிதம், கவிதை, கட்டுரை. அதற்கான யுக்தி அபாரம். உதவிக்கு பல உண்மை பாத்திரங்கள் ஜெயமோகன், ராமசாமி (சுந்தர ராமசாமி?). பல பாத்திரங்கள் பல உண்மை மனிதர்களிடமிருந்து உருவாகியிருக்கலாம், யாருக்கு தெரியும்.
எச்சரிக்கை : சற்றே பெரிய கட்டுரை. பெரிய புத்தகமல்லவா?
26 ஆகஸ்ட் 2014
காடு - ஜெயமோகன்
காட்டை பற்றிய கனவு சிறிய வயது முதல் உண்டு. மலையடிவார கிராமம் என்றாலும், மலை மேல் ஏறியதில்லை. மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார கிராமம், ஆனால் காடு என்று ஏதுமில்லை. சோம்பேறித்தனத்தாலும், இது போன்ற விஷயங்களுக்கான தகுந்த துணையில்லாததாலும், வீட்டில் உதை கிடைக்குமென்பதாலும் அந்த பக்கம் போனதில்லை. இருந்தும் காட்டை பற்றி பல கதைகள், சாகச கதைகள் எல்லாம் படித்து படித்து ஒரு மயக்கம் உண்டு.
சில சந்தர்ப்பங்களில் காட்டை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தும் ஏமாற்றம் தான். சுருளி அருவி பகுதி நல்ல அடர்ந்த காட்டு பகுதி. ஆனால் எங்கும் நுழைய முடியாத படி வனத்துறை கட்டுப்பாடு உண்டு. தப்பித்தவறி சென்றாலும் பாட்டில்கள் காலை கிழிக்கும் அபாயமுண்டு. குற்றாலம் பற்றி பெரிய கனவுடன் சென்ற எனக்கு, மெயினருவி தந்தது ஏமாற்றம். மரங்களுக்கு நடுவில் சத்தத்தை மட்டும் முதலில் காட்டி சுருளி அருவி தரும் அந்த தரிசனம் இதிலில்லை. மொட்டை பாறையில் கடைகளுக்கு நடுவிலிருக்கும் அருவி எனக்கு பிடிக்கவில்லை, ஒரு குரங்கு கூட இல்லாத அருவி என்ன அருவி.
பெங்களூருக்கு வந்த பின் அலுவலக நண்பர்கள் மலையேற்றத்திற்கு அழைத்தனர், ஆர்வத்துடன் சென்று காரிலிருந்து இறங்கி பார்த்தவனுக்கு அதிர்ச்சி. ஒரு பெரிய மொட்டை மலை. காட்டு ஆசை கொஞ்சம் பூர்த்தியானது கோவா சென்ற போது. யூத் ஹாஸ்டல் அசோசியேஷன் ஏற்பாடு செய்த மலையேற்றம், ஓரளவிற்கு காட்டு ஆசையை திருப்தி செய்தது. ஓரளவிற்கு அடர்ந்த காடு, எப்போதும் ஒரு பக்கத்தில் சிறிய ஓடை, குளிர்.
25 ஜூன் 2014
வெண்முரசு : முதற்கனல் - ஜெயமோகன்
முதற்கனல் புத்தகம் வந்து பல மாதம் ஆகிவிட்டது. இருந்தும் தொடர்ச்சியாகப் படிக்க முடியவில்லை. காரணம் மற்றுமொரு புதுவரவு. நேரம் கிடைத்ததும் இரண்டு முறை படித்து விட்டேன். தினமும் ஆன்லைனில் படித்தாலும் எனக்கு அது அந்தளவிற்கு பிடித்தமானதாக இல்லை, படித்தவுடன் மறந்துவிடும். பலருக்கு அதுதான் பிடித்திருக்கின்றது போல, படித்துவிட்டு நாளெல்லாம் அதைப் பற்றி நினைத்து கொண்டிருக்க வசதியாக இருக்கின்றது என்கின்றார்கள், ஆனால் எனக்கு அலுவலகம், குடும்பம் என்று இருப்பதால் அதற்கும் கொஞ்சம் நினைவை தர வேண்டியிருக்கின்றது. முழுப்புத்தகமாக கையில் வைத்து படிப்பதுதான் எனக்கு திருப்திதரக்கூடியது. அதைப் பற்றி எழுதுவதற்கு இன்னும் அதிக நேரம் பிடித்துவிட்டது. எதை விட்டு எதைப் பற்றி எழுத.
மகாபாரதம்.
இல்லாதது எதுவுமில்லை என்று அனைத்தையும் கொண்ட இதிகாசம். இதிகாசம் என்றால் இது நடந்தது என்று பொருளாம். மேலோட்டமாக பார்த்தால் மகாபாரதம் முழுவதும் அரசியல் சதுரங்கமாகத்தான் தோன்றும். அரசியல் சதிகள், போர்கள். ஆனால் மகாபாரதம் முழுவதும் பேசப்படுவது தர்மம். ஜெயமோகனின் மகாபாரதம் என்பதால் அறம் என்றே சொல்வோம்.
எது தர்மம், எவ்விடத்தில் எது தர்மம் என்று பல விவாதங்களை கிளப்பி அதற்கு விடையை கூறிச்செல்லும். இது ஒரு பரிமாணம் என்றால் மறுபுரம் பல தரப்பட்ட பாத்திரங்களை படைத்து அவற்றை மோதவிட்டு பார்க்கும் ஒரு பரிமாணம். கருப்பு வெள்ளை போல பாத்திரங்கள் தட்டையானவை அல்ல. சராசரி மனித உணர்ச்சிகளின் கலவை. நம்மை போன்ற மனிதர்கள்தான். இதுதான் மகாபாரதத்தை பலருக்கும் நெருக்கமானதாக காட்டுகின்றது. பாத்திரங்கள் அனைவரும் அந்தந்த நேரத்திற்கு தர்மானதை செய்கின்றனர்.
பாண்டவர்களுடன் சமாதானமாக போகச்சொல்லும் சகுனிதான் வேறுவழியின்றி துரியோதனனுக்கு பகடையாடி நாட்டை வென்று தருகின்றான். பழி வாங்க சபதம் ஏற்கும் பீமனும் அர்ச்சுனனும் போருக்கு முன் சமாதான பேச்சிற்கு ஆதரவளிக்கின்றனர். இந்த முரண்பாடுகள்தான் சுவாரஸ்யத்தை தருகின்றன.
01 ஏப்ரல் 2014
ரப்பர் - ஜெயமோகன்
ஜெயமோகனின் முதல் நாவல். அகிலன் நினைவு பரிசு பெற்ற நாவல்.
மனிதன் எங்கெல்லாம் தன் காலடியை வைத்தானோ அங்கெல்லாம் தான் காலடி வைத்த இடத்தை அழித்து நாசமாக்கிவிடுவது வழக்கம். மனிதனின் தேவையும் ஆசையும் அவ்வளவு பெரியது. இயற்கையை அளித்து உண்டாக்கிய பல விஷயங்களில் முக்கியமானவை காபி, தேயிலை, ரப்பர் தோட்டங்கள்.
உலகில் அதிக ரப்பர் உற்பத்தி செய்யும் நாட்டில் நமது நாடும் ஒன்று. முக்கிய இடம் கேரளா. ரப்பர் உற்பத்தி என்பது ஒரு வகையில் வளர்ச்சி என்றாலும் அந்த வளர்ச்சி உருவானது காடுகளை அழித்து. ரப்பரும் ஒரு வகை மரம்தானே என்றாலும், அது நம் நாட்டிற்கேற்ற மரமல்ல. அது உறிஞ்சும் தண்ணீர் மிக அதிகம். இரண்டாவது மனிதர் காலடி படாத இடத்தில் மனிதனல்லாத மற்ற உயிர்களுக்கு சுதந்திரம் இருக்கும். மனிதன் வந்துவிட்டால அவனுக்கு போகத்தான் மற்ற உயிர்களுக்கு. மனித நடமாட்டம் மிகுந்த பல இடங்களிலிருந்து மற்ற மிருகங்கள் வெளியேறி ஓடுகின்றன. இதனை பிண்ணனியாக வைத்து எழுதப்பட கதை ரப்பர். இரப்பர் என்று எழுத வேண்டும் என்பார்கள், இரப்பர் என்றால பிச்சைக்காரர்கள் என்றாகி குழப்பமாகிவிடும். எனவே ரப்பர்தான்
12 பிப்ரவரி 2014
ஈராறு கால்கொண்டெழும் புரவி - ஜெயமோகன்
ஜெயமோகனின் மற்றுமொரு நாகர்கோவில் குறுநாவல். ஈராறு கால்கொண்டெழும் புரவி. சித்தர் பாடல்கள், பட்டினத்தார் பாடல்கள் தெரிந்தவர்களுக்கான கதை. பாதிக்கு மேல் ஒன்றும் புரிய வில்லை. குறிப்பாக கடைசி பகுதி, புரிந்தவர்கள் மறக்காமல் இங்கு வந்து என்ன என்று தெரிவிக்கவும். தன்யனாவேன்.
இது போன்ற கதைகள் போரடித்துவிடும், இது அவ்வளவாக போரடிக்கவில்லை. காரணம் அவரின் நடை, ஊடாடும் நகைச்சுவை. மதுரை பக்கத்துக்காரன் என்றாலும், அம்மா வழி தமிழான திருநவேலி தமிழும் கொஞ்சம் பழக்கம், அதனாலோ என்னவோ நாகர்கோவில் தமிழும் பிடித்துவிட்டது. கதையை நான் முழுக்க படித்ததற்கு காரணம் அத்தமிழ்தான்.
07 பிப்ரவரி 2014
கன்னிநிலம் - ஜெயமோகன்
வழக்கமாக ஒவ்வொரு எழுத்தாளர்களுக்கும் ஒவ்வொருவிதமான எழுத்துக்களே கை கூடி வரும். அவர்களின் ஏரியா தாண்டினால் சொதப்பிவிடும். ஆனால் ஜெயமோகனுக்கு எல்லா வகை எழுத்தும் அட்டகாசமாக வருகின்றது.
வெள்ளிக்கிழமை வேலை செய்தால் உடலுக்கு நல்லதில்லை என்பதால், இவர் தளத்தை மேய்ந்து கொண்டிருந்தேன். ஏகப்பட்டதை எழுதி குவித்திருக்கின்றார், மூடுக்கு தகுந்தமாதிரி ஒன்றிலிருந்து ஒன்றாக தாவுவது வழக்கம். இன்று இக்கதை. ஆன்லைனில் படிப்பது அவ்வளவாக பிடிக்காது, ஆனால் வேறுவழியில்லை. சமீபத்தில் இப்படி ஒரு விறுவிறுப்பான கதையை படிக்கவில்லை.
வடகிழக்கு மாநிலத்தில் ஏதோ ஒரு மூலையில், பர்மா எல்லையில் இருக்கும் ஒரு ராணுவ முகாமில் தொடங்கும் கதை, யாருமற்ற நிலத்தில் முடிவடைகின்றது. ராணுவ லெஃப்டினெட் நெல்லையப்பன், காட்டிற்குள் ஒரு போராளி பெண்ணை கைது செய்கின்றான். அவள் மேல் கொண்ட காதலால், காட்டிற்கு அலைந்து, துரோகியாகி, மீண்டும் அவளை அடைகின்றான்.
கதையை மூன்றாக பிரிக்கலாம், முதல் பகுதி ஆக்ஷன், இரண்டாம் பகுதி ரொமாண்டிக், கடைசி பகுதி ட்ரமாட்டிக்.
24 டிசம்பர் 2013
வெள்ளையானை - ஜெயமோகன்
யானை ஒரு வலிமையான மிருகம். அதைவிட வலிமையானது அதன் மனம். யானை எதையும் மறப்பதில்லை அதன் வலிமையை கூட, அதை தேவையில்லாமல் பயன்படுத்துவதில்லை. அது தன்னை அடக்கியாள்வதை அனுமதிக்கின்றது. ஒரு சிறிய தளைக்கு கட்டுபட்டு நிற்கின்றது. ஒரு எல்லை வரை. அதை தாண்டினால் எல்லாம் தூசு. நமது இந்தியாவையும் அப்படி ஒரு யானையுடன் ஒப்பிடலாம். நமது நாட்டின் வலிமை அளப்பறியது. அந்த வலிமையை பலர் அடக்கியாண்டார்கள். இன்று வரை வேறு வேறு வடிவங்களில் அது அடக்கி ஆளப்பட்டு வருகின்றது. கடைசியில் காந்திவழியே தன் வலிமையை அறிந்து திருப்பி அடித்தது. ஆனால் இன்று மீண்டும் அடங்கியுள்ளது. எப்போது மறுபடியும் தன் வலிமையறியுமோ? அந்த யானையை கட்டியிருந்தது வெள்ளையர்களின் தளை. பயம் என்னும் இழையாலும், அதிகாரம் என்னும் இழையாலும் செய்யப்பட்ட தளை. அதன் ஊடே அதை உறுதியாக்க உதவியது நமது ஜாதியடுக்கு என்னும் மற்றொரு இழை.
வெள்ளையானை - கதையின் ஆரம்பத்தில் வரும் ஐஸ் ஹவுஸின் பெரிய பனிப்பாளத்திற்கு உவமையாக வருகின்றது. இறுதியில் கூறப்படுவது போல வெள்ளையானை என்பது ஒரு நோயுற்ற யானை. நம் நாட்டிற்கும் உவமையாகலாம்.
நம்மை முழுவதும் சுரண்டியவர்கள் ஆங்கிலேயர்கள். அந்த சுரண்டலின் விளைவு கொடிய பஞ்சங்கள். அத்தகைய கொடிய பஞ்சம், தாது வருட பஞ்சம் என்றழைக்கப்பட்ட பஞ்சம். 1876 - 78ல் கொடிய பஞ்சம் தாக்கியதில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் ஒரு கோடிக்கு மேல் எனப்படுகின்றது. கணக்கில் வந்ததே ஒரு கோடி என்றால் கண்டிப்பாக அதற்கு மேலாகவே இருக்கும்.
17 அக்டோபர் 2013
ஜெயமோகன் குறுநாவல்கள்
ஜெயமோகனின் குறுநாவல்களின் தொகுப்பு. அவரின் மொத்த குறுநாவல்கள் அனைத்தும் உள்ளதா, இல்லை தேர்ந்தெடுத்த கதைகளா என்று தெரியவில்லை. விதவிதமான கதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான களத்தில் எழுதப்பட்டுள்ளது. ஒரு சில கதைகள் குறுநாவல் என்பதை விட பெரிய சிறுகதைகள் என்று கூறலாம்.
ஜெயமோகனின் பெரிய பலமான தளம் தொன்மம் சார்ந்த கதைகள். அவரின் மற்ற கதைகளை விட அந்த மாதிரியான கதைகளே மிகவும் பிடித்தமாக உள்ளது.
கிளிக்காலம், இரண்டுங்கட்டான் என்று கூறப்படும் வயதிலுள்ள சிறுவர்களை(?)ப் பற்றிய கதை. கதைநாயகன் பெயர் ஜெயன் (!). சிறுவர்கள் என்ற இடத்திலிருந்து பெரியவர்கள் என்ற இடத்திற்கு நகரும் கதை. அந்த பருவத்தினருக்கு இருக்கும் விபரீத சந்தேகங்கள், பெண்களை பற்றிய மயக்கங்கள் எல்லாம் இயல்பான உரையாடல்களில் வெளிப்படுகின்றது. மிகவும் கவரவில்லை.
பூமியின் முத்திரைகள்
பாதி கதையிலேயே தூக்கம் வருகின்றது. பயங்கர போரான கதையாக படுகின்றது எனக்கு. கதை உள்ளேயே போக மறுக்கின்றது. யாருக்காவது மிகவும் பிடித்திருக்கலாம். அவர்களுக்கு வாழ்த்துக்கள். கிறிஸ்துவ பிண்ணனியில் அமைந்த கதை.
18 மே 2013
மத்தகம் - ஜெயமோகன்
அலுக்காமல் பார்த்து ரசிக்க கூடிய விஷயங்கள் என்று சில உண்டு. குழந்தை. யானை. கடல். அதில் ஒன்றான யானையை பற்றிய கதை. யானை என்னும் ஒரு மிருகத்தை இத்தனை நெருக்கமாகவும், அதன் மனதை படிப்பவர்களும் உணரும் படி படைக்க முடியுமா என்ற பிரமிப்பு படித்து முடித்த பின்னும் போகவில்லை.
யானையை ரசிப்பது என்பது ஒரு குழந்தையை ரசிப்பது போலத்தான். யானையின் செய்கை எல்லாம் ஒரு கபடமற்ற குழந்தையின் செய்கை போலத்தான் தோன்றும். அவ்வளவு பெரிய உருவம் ஒரு சின்ன சங்கிலிக்கு கட்டுப்பட்டு அடங்கி இருப்பது என்பது ஒரு பார்வைக்குதான். அது நினைத்தால் அச்சங்கிலி தூள்தூளாகும். காட்டிலிருந்தாலும் நாட்டிலிருந்தாலும் யானை யானைதான். அது போனால் போகின்றது என்று மனிதனுக்கு கட்டுப் பட்டு இருக்கின்றது.
கேசவன் கஜராஜ கேசரி. திருவனந்தபுர மன்னரின் தோழன். அவனின் பாகன்களில் ஒருவன் பரமன். பரமன்தான் கதை சொல்லி. மொத்தம் ஐந்து அந்தியாயங்கள். தவறுதலாக குழியில் விழுந்த யானை அக்குழியிலியே பிரசவித்த குட்டி. குட்டி கொஞ்சம் வளர்ந்ததும் அரச கொட்டடிக்கு வருகின்றது. யானை வந்த வேளையில் நோய்வாய்ப்பட்ட தம்புரான் எழுந்து நடக்க, யானை அவரின் தோழனாகின்றது. வளர்ந்ததும் திருவெட்டாறு கோவிலிக்கு விடப்படும் கேசவன், தம்புரான் பட்டத்திற்கு வந்தது அதுவும் ஒரு பட்டத்து யானையாக மாறுகின்றது. கடைசியில் தம்புரான் மறைந்ததும், பட்டத்திலிருந்து கீழே இறங்கி வருகின்றது.
கதை என்று பெரிதாக ஒன்றுமில்லை என்றாலும் அது காட்டும் உலகம் வித்தியாசமானது. சாதரணர்கள் காண, கண்டிருக்க முடியாத உலகம். யானை, யானை வளர்ப்பு, யானைகளின் சுபாவம் என்று ஒரு சரடு. யானைகளுடனே வாழும் பாகன்களின் உலகம் என்று ஒரு சரடு.இரண்டிற்கும் ஊடே அதிகாரம் என்னும் ஒரு சரடு. இது அனைத்தும் பின்னி பிணைந்ததுதான் மத்தகம்.
மத்தகம் என்பது பாகன் அமரும் இடம். கேசவன் அம்மத்தகத்தில் யாரையும் அமர விடுவதில்லை. தம்புரானை மட்டுமே அவ்விடத்தில் அனுமதிக்கும். கதை உள்ளே பேசுவது அதிகாரத்தை பற்றி. தம்புரானின் தோழனாக இருக்கும் போது கம்பீரமாக ஒரு ராஜாவைப் போல இருக்கும் கேசவன், தம்புரான் இல்லை என்று தெரிந்ததும், அதிகார மாற்றத்தை உணர்ந்து சாதரண பாகனிடம் தன்னை ஒப்படைத்து கீழ்படிவதாக மாறுகின்றது. கஜகேசரியாக இருக்கும் வரை பாகனின் தவறுக்காக அவனை நெருங்க விடாத கேசவன், அவனை தன் மத்தகத்தில் ஏற்றி வைத்துக் கொள்கின்றது.
பாகன்களின் வாழ்க்கை. யானையின் காலடியில் வாழ்வது என்பது மரணத்துடன் இருப்பது போலத்தான். யானை கோபம் கொண்டால், ஒரு வினாடி போதும் பாகன் போய் சேர வேண்டியதுதான். பாகனின் சொல் பேச்சு கேட்கும் யானை எப்படி அவர்களை தாக்கும் என்பதற்கான் விடை இங்குள்ளது. பாகன்களின் பார்வையில் யானை, என்று அருமையாக காட்டியுள்ளார். கதை வெகுகாலத்திற்கு முன்பு நடக்கின்றது. பாகன்களின் பரிதாப நிலையை விட அவர்களின் மனைவிகளின் நிலை, எப்போது வேண்டுமானாலும் வாழ்க்கை பறி போகும் அபாயம், அதன் பின்னால் வாழ வேண்டிய கட்டாயம், அதற்காக அவர்கள் தரும் விலை.
முக்கியமானது யானையின் குணாதியங்கள். காட்டிற்கு ராஜா சிங்கம் என்கின்றார்கள். உண்மையான ராஜா யானைதான். சிங்கம் ஒரு சோம்பேறி வேறு. யானையின் கம்பீரம், பலம் அனைத்தையும் விட அப்பலத்தை தன் கட்டிற்குள் வைத்திருக்கும் மனம். காட்டில் வாழும் மிருகங்களில் அசாத்தியமான நினைவாற்றலுடனும், பலத்துடனும், புத்திசாலித்தனத்துடன் இருக்கும் ஒரே மிருகம் யானைதான். எல்லா யானையும் ராஜா இல்லை. அனைவரும் தலைவராக முடியாதல்லவா. கேசவன் அப்படிப்பட்ட தலைவன். கஜராஜன். கேசவன் அவனுக்கு முந்தைய கஜராஜனான நாரயணனை கண்டு பயந்தாலும் அதை சீண்டிபார்க்கின்றான். கேசவனை சீண்ட கடைசியில் கொச்சு கொம்பன் வருகின்றான்.
ஜெ.மோவிற்கு யானை என்றால் மிகவும் பிடிக்கும் போல. காடு நாவலில் வரும் கீறக்காதன், குட்டப்பன் யானையை பற்றி பேசும் விஷயங்கள். யானை டாக்டர். விஷ்ணுபுரத்தில் வரும் வீரன், பைரவன். ஊமைச் செந்நாயில் வரும் கொம்பன், மண் கதையில் வரும் இன்னொரு கொம்பன் என பல யானைகள். ஆனால் கதை முழுக்க வந்து கதையையே தன் மத்தகத்தில் கொண்டு செல்வது இந்த கேசவன் மட்டும் தான்.
ஜெயமோகனின் கதைகளில் என்னை அதிகம் கவர்வது இது போன்ற கதைகள்தான். காடு, மலை, தொன்மம் போன்ற விஷயங்களை இவரை அடித்துக் கொள்ள ஆள் இல்லை. ஒரு யானையுடன் ஒரு மணி நேரம் பயணம் செய்த உணர்வை தருகின்றது இக்கதை.
கதை ஜெ.மோ தளத்தில்
13 மார்ச் 2013
பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் - ஜெயமோகன்
பேய்கள் சுவாரஸ்யமானவை. அனைவருக்கும் ஏதாவது பேய்க்கதைகள் கண்டிப்பாக தெரிந்திருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பேய்கள் பரிச்சியமாயிருக்கும். சிறுவயதில் சாதாரண கதைகளை கேட்பதில் உள்ள சுவாரஸ்யத்தை விட அமானுஷ்யக்கதைகள் தரும் சுவாரஸ்யம் அதிகம். என் பேய்கள் எனது பள்ளியிலேயே இருந்தது, தேடி அலைய வேண்டியதில்லை. பற்றாக் குறைக்கு எதிரில் இருந்த பள்ளிவாசல் மாடியில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு ஜின் வேறு.
பெரும்பாலும் பேய்கள் என்பது நமது மனதில் உருவாவதுதான். தேவதைகளும் அது போலத்தான். சிலரின் பேய்கள் சிலருக்கு தேவதையாகக் கூடும். பேய் பயம் என்பது பெரும்பாலும் உருவாக்கப்படுவதுதான். தானாக அது உருவாவது, உண்மையான பேயை பார்க்கும் போதுதான். தனியாக பல நாள் இருந்த வீட்டில், கூட இருந்தவனின் பேய் அனுபவம் என்னை தூங்க விடாமல் தடுத்தது.
தமிழகத்தை விட மலையாளத்தில் அதிக அமானுஷ்ய கதைகள் உண்டு என்று நினைக்கின்றேன். தமிழில் அமானுஷ்யக் கதைகளுக்கு என்று வெகு சிலரே இருக்கின்றனர். சிறுவயதில் படித்தது கலாதர் என்பவரின் கதை. அஷ்டமாசித்திகளை விஞ்ஞானத்துடன் கலந்து எழுதியிருந்தார். பிறகு பேய்க்கதை மன்னன் :) பி.டி சாமி. ஆனால் அந்தளவிற்கு உவப்பாயில்லை. சிறுவயதில் படிக்கும் போதே பயம் வரவில்லை.
இவ்விஷயத்தில் ஓரளவு வெற்றி அடைந்தவர் இந்திரா சவுந்திரராஜன். அவரது ரகசியம், விட்டுவிடு கறுப்பா, ருந்திர வீணை, சிவம், சிவமயம், காற்று காற்று உயிர் என்று அனைத்தும் படிக்க விறுவிறுப்பானவை. ரகசியம் விகடனில் படு ஆர்வத்துடன் படித்த கதை. கதையின் சஸ்பென்ஸ் உடையும் இடம் கடைசி வரி. அது டி.வி தொடராக இன்னும் அட்டகாசமாக வந்தது. (டிவிடி கூட வந்துள்ளது, செம காஸ்ட்லி. வாங்க நினைத்தவன், மனைவியின் முறைப்பை கண்டு வைத்துவிட்டேன்) காற்று... கதையை இரவில் தனியாக படிக்க ஆரம்பித்து பயந்து வைத்துவிட்டேன். விஞ்ஞானத்தையும், அமானுஷ்யத்தையும் கலந்து, முடிக்கும் போது இரண்டில் எதை நம்புவது என்பதை வாசகனிடம் விட்டு விடும் திறமை இவரது சிறப்பு.
02 மார்ச் 2013
ஏழாம் உலகம் - ஜெயமோகன்

அதிகாலையிலேயே முழிப்பு வந்த பண்டாரத்திற்கு நிலைகொள்ளாமல் தவிக்கின்றார். அவரது சினைகண்ட மாட்டை நினைத்து. எப்போது பிரசவமாகும், காவலுக்கு ஆளிருந்தும் ஒரு முறை ஒரு குட்டியை நரி கொண்டு போய்விட்டது என்று பயந்து கொண்டிருக்கின்றார். மனைவி தான் பிரசவிக்கும் போது கூட இப்படி இல்லை, இப்போது என்ன இவ்வளவு தவிப்பு என்று அலுத்துக் கொள்கின்றாள். அவர் அவசர அவசரமாக அவரது மாட்டை காண போகின்றார். இப்படி நினைத்துக் கொண்டுதான் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு கையும் காலும் கண்ணும் இல்லாத முத்தம்மைதான் பிரசவிக்க போகின்றாள் என்பதில் ஆரம்பித்த அதிர்ச்சி கடைசிவரை போகவில்லை.
பெரிய கோவில்கள், தெருக்கள், பஸ் ஸ்டாண்ட் என்று பல இடங்களில் நாம் பார்க்கும் பிச்சைக்காரர்கள் பின்னால் இப்படி ஒரு மிகப்பெரிய வலை இருக்கும் என்பதும், இது ஒரு மிகப்பெரிய தொழில் என்றும் இதைப் படிக்கும் முன் வரை தெரியாது. நான் கடவுள் படத்திற்கு பின் இதை வாங்கினேன். அதில் காட்டியது இப்புத்தகத்தில் உள்ளதில் ஒரு பத்து சதவீதம் கூட இருக்காது.
பண்டாரம் ஒரு மிகப் பெரிய முருக பக்தர். அவர் மனைவி, குழந்தைகளிடம் பாசமாக இருக்கும் ஒரு குடும்பத்தலைவர். பெண் அழுவதால் நடு இரவில் ஓடிப் போய வளவி செய்து போடும் பாசமுள்ள தகப்பன். ஆனால் அவரது மறுபக்கம் பிச்சைக்காரர்களை வைத்து சம்பாதிக்கும் தொழில்.
12 பிப்ரவரி 2013
நான்காவது கொலை - ஜெயமோகன்
சனி, ஞாயிறு வேலை வெட்டி ஏதுமில்லை. டீவியும் டமார். இன்டர்நெட்டே கதி. வகை தொகையில்லாமல் கண்டதையும் படித்து களைத்து, மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் என்று ஜெயமோகன் அவர்களின் தளத்தில் இருந்த நகைச்சுவை வகை கட்டுரைகளை படிக்க ஆரம்பித்தேன்.
பெரும்பலானவை சிரிக்க வைத்தது. சில புன்னகைக்கவும், சில அழவும் வைத்தது.அய்யோ பாவம், இலக்கியம் எழுதி எழுதி நகைச்சுவை கட்டுரைகளில் கூட பெரிய பெரிய வரிகளாகவும், கடின வார்த்தைகளை போட்டும் எழுதுகின்றாரே என்று நினைத்துக் கொண்டேன். அப்போதுதான் இக்கதை நினைவில் வந்தது. திண்ணையில் எப்போதோ படித்தது. திண்ணை புது திண்ணையாகி பழைய திண்ணையில் தூங்கியவர்களை எங்கோ விரட்டி விட்டுவிட்டார்கள். இக்கதை பத்திரமாக சொந்தக்காரர் திண்ணையில் இருந்தது.
ஆரம்பித்ததில் இருந்து சிரித்துக் கொண்டே இருந்தேன். கிண்டல் கிண்டல் கதை முழுவதும் கிண்டல். திகம்பர சாமியாரில் ஆரம்பித்து, பரத் சுசீலா வரை. சூப்பர் மேனிலிருந்து ஜேம்ஸ்பாண்ட் வரை அனைவரையும் கிண்டலடித்துள்ளார்.
அனைத்து எழுத்தாளர்களின் நடையையும், கதாபாத்திரங்களையும் அவர் இஷ்டத்திற்கு உலாவ விட்டுள்ளார். கணேஷ் வசந்த், சங்கர் லால், ஆழ்வார்க்கடியான், இன்ஸ்பெக்டர் கோபாலன், துப்பறியும் சாம்பு, ஷெர்லக் ஹோம்ஸ் வாட்சன், சூப்பர் மேன், பேட் மேன், ஸ்பைடர் மேன், இரும்புக்கை மாயாவி, திகம்பர சாமியார் பெயரில்லா பாலகுமாரன் கதாபாத்திரம். அனைத்து எழுத்தாளர்களின் நடையும் இவருக்கு சரளமாக வருகின்றது. சுஜாதாவின் நடை அச்சு அசலாக பொருந்தி போகின்றது. இவர் அதே நடையில் ஒரு கதை எழுதி சுஜாதா எழுதினார் என்றால் கண்டிப்பாக நம்பிவிடுவார்கள். விஷ்ணுபுரமும், உபபாண்டவ புரமும் துணைக்கு வருகின்றது.
மனசு ரிலாக்ஸாகும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



