30 ஏப்ரல் 2020

ரூஹ் - லக்‌ஷ்மி சரவணக்குமார்

கானகன் எழுதிய நாவலாசிரியரின் மற்றொரு படைப்பு.

எழுத்தாளர் சாருநிவேதிதா இவரைப் பற்றி மிக பெரிதாக எழுதியிருந்தார். வழக்கமாக அவர் பாராட்டினாலும், திட்டினாலும் எக்ஸ்ட்ரீம் லெவலி போவது வழக்கம். இந்த நாவலை பலமாக பாராட்டியிருந்தார்.

அன்பை பேசுகின்றது, கருணை, தூய உள்ளம், எக்ஸட்ரா எக்ஸட்ரா. இதுமாதிரிதான் இந்நாவலை பற்றி பலர் எழுதியிருந்தார்கள்.

இஸ்லாமிய பிண்ணனி கதை என்பதாகவும், சூஃபிகள் பற்றிய கதை என்றும் பல அறிமுகங்கள்.

உண்மையில் நாவல் அப்படித்தான் என்றால் இல்லை. இஸ்லாமிய பிண்ணனி என்றவுடன் ஒரு கடலோரக கிராமத்தில் அளவிற்கு நினைத்து கொள்ளக் கூடாது, சூஃபியிசம் பற்றி ஏதாவது வருமா என்றால் அதுவும் இல்லை. இஸ்லாமிய பாத்திரங்கள் இருக்கின்றன அவ்வளவுதான்.

கதையின் ஆரம்பத்தில் வரும் ஒரு சிறிய காட்சியே கதை மீது முதல் ஒவ்வாமையை உண்டாக்கிவிட்டது.   மாராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜியின் கடற்படை தளபதி கானோஜி ஆங்க்ரே, அவர் ஏதோ ஒரு கொள்ளைக்காரர் போல சித்தரிக்கப்படுகின்றார்.

மராட்டிய கடற்படை பற்றிப் பேசிவிட்டு, கானோஜி ஆங்க்ரே பற்றிப் பேசாதிருக்க முடியுமா என்ன?  இவர்தான் மராட்டிய கடற்படையை புதியதொரு சிகரத்துக்கே கொண்டு சென்றவர்

மேலே உள்ளவை நமது பிரதமர் பேசியவை. இதைப் படித்தவுடனே நாவலின் மீது ஒரு விலக்கம் வந்துவிட்டது.

அதன் பின்னால் கதை தட்டு தடுமாறி செல்கின்றது. ஒரு இஸ்லாமிய பெண்ணிற்கும் ஒரு சிறுவனுக்கும் இடையிலான பாசத்தை பற்றி பேச ஆரம்பித்து, கதையை ஜிலேபி மாதிரி சுற்றி, நடுநடுவே ஆசிரியர் வந்து அமர்ந்து கொண்டு தத்துவங்கள் பல பேசி, ஒரு வழியாக எங்கோ சென்று முடித்துவிட்டார்.

படித்தவனுக்கும் அப்பாடா முடிந்ததே என்று ஒரு திருப்தி. வளவள என்று ஆசிரியர் பேசுவது பயங்கர எரிச்சல்.

ஒரு அரைகுறை முயற்சி.  

23 ஏப்ரல் 2020

கானகன் - லக்‌ஷ்மி சரவணகுமார்

காடு பற்றிய ஒரு நாவல். 

காட்டைப் பற்றி ஏற்கனவே காடு நாவல் பதிவில் எழுதியிருக்கிறேன். காடு நாவல் நினைவில் வராமல் இதை படிக்க இயலவில்லை. இரண்டும் வேறு வேறு விஷயங்களை பேசுபவை.

கானகன், காட்டை வேட்டையாடுவதன் மூலம் காட்டை அறிய நினைக்கும் ஒருவன், காட்டின் மிருகங்களை நேசிப்பதன் மூலம் காட்டை அறிய நினைக்கும் ஒருவன் இந்த இருவரைப் பற்றிய கதை. 

ஒரு புலி வேட்டையில் ஆரம்பிக்கும் கதை புலி வேட்டையில் முடிகின்றது.

கதை மேற்குதொடர்ச்சி மலையில் இருக்கும் அகமலை என்னும் பகுதியில் நடக்கின்றது. கதை ஆரம்பத்தில் புலி வேட்டையில் ஆரம்பிக்கின்றது, ஊருக்குள் புகுந்து நாசம் செய்யும் புலியை கொல்லும் தங்கப்பன், சிறந்த வேட்டைக்காரன். இருந்தும் கொன்றது தாய்ப்புலியை என்று தெரிந்த பின் வருந்துகின்றான். அதற்கு பின் கதையை எந்த தளத்தில் நகர்த்துவது என்ற குழப்பம் வந்து விட்டது போல தெரிகின்றது. மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இருக்கும் உறவை வைத்து நகர்த்துவதா இல்லை காட்டிலேயே வாழும்  பூர்வகுடிகளின் நிலையை அரசியலாக  பேசுவதா என்று இரண்டிலும் கவனம் குவியாமல் போய்விட்டது.