ராமாயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராமாயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12 ஜனவரி 2017

Scion of Ikshvaku - Amish Tiripathi

அமிஷ் திரிபாதியின் அடுத்த நாவல். ராம் சந்திரா சீரீஸ் என்ற தலைப்பில் ஆரம்பமாகியுள்ளது. 

ராமாயணத்தை முந்தயை நாவல் பாணியில் எழுத ஆரம்பித்துள்ளார். ராமாயணத்தை மாற்றி எழுதுவது கொஞ்சம் சுலபமானதுதான். ஏனென்றால் ஏற்கனவே பல ராமாயணங்கள் வழக்கில் இருக்கின்றன. புத்திசாலியான எழுத்தாளர் அனைத்தையும் கலந்து கட்டி ஒரு புதிய ராமாயணத்தை உண்டாக்கிவிடலாம். ராவணன் சீதையை கடத்துவதுடன் நாவல் ஆரம்பமாகின்றது. ஏன்? அப்பொழுதுதானே வாசகன் முதல் அந்தியாத்திலேயே எழுந்து உட்காருவான். பிறகு மெதுவாக முப்பது ஆண்டுகளுக்கு பின்னால் கதை செல்கின்றது.

தசரதனுக்கும் ராவணனுக்குமான் போரில் கதை ஆரம்பிக்கின்றது. சரியாகத்தான் எழுதியிருக்கின்றேன். தசரதன் தோற்கின்றான். ராமன் பிறக்கின்றான். ராமனை தோல்விக்கு காரணமானவாக கருதி தசரதன் வெறுக்கின்றான். நான்கு சகோதரர்களுக்கான குணங்களை சமைப்பதில் மகாபாரதத்தை கடன் வாங்கிக் கொண்டிருக்கின்றார். ராமன் சத்தியசீலன், விதிகளை கண்டிப்பாக பின்பற்றுபவன் தர்மபுத்திரனின் சாயலை அதிகமாக புகட்டியுள்ளார். பரதன் ஜாலியான் ஆள், பெண்கள் விஷயத்தில் அர்ஜ்ஜுனன். லக்ஷ்மணன், பீமன் சாயல் நல்ல உணவு, பலசாலி. சத்ருக்கணன் - சகாதேவன். படிப்பாளி.  தசரதனின் ஆட்சியில் அயோந்தியின் நிலை பரிதாபமாக இருக்கின்ற நிலையில், ராமன் நாட்டின் பாதுகாப்பை பொறுபேற்று கொண்டு சிறப்பாக செயல்படுகின்றான். மந்திரை ஒரு பணக்கார வியாபாரியாக வருகின்றாள். ராமனின் மீதான அவள் வன்மத்திற்கு வேறு ஒரு காரணத்தை காட்டுகின்றார். இருபுறமும் தவறில்லாமல் பேலன்ஸ் செய்யும் வகையில் அமைத்து தன் ஐஐடி புத்திசாலித்தனத்தை காட்டுகின்றார்.

07 செப்டம்பர் 2013

ராமாயணம் - சோ, ராஜாஜி

ராமாயணமும், பாரதமும் இதிகாசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இதிகாசம் என்றால் நடந்தது என்று பொருள். இந்த இரண்டில் ராமாயணம் நாடு முழுவதும் பரவியுள்ளது. நம் நாட்டில் மட்டுமின்றி அண்டை அயல் நாடுகளில் கூட ராமாயணம் பரவியுள்ளது.


ராமாயணத்தில் எத்தனையோ வகையான ராமாயணங்கள் வழக்கத்தில் உள்ளது. நூற்றுக் கணக்கான ராமாயணங்கள் உள்ளதாக கூறப்படுகின்றது.  அது பாடப்படும் இடத்திற்கு தகுந்த மாதிரியும், பாடுபவர்களின் மனோ தர்மப்படியும் விதவிதமாக வழங்கப்படுகின்றது. சில காலப் போக்கில் மாறியும் இருக்கலாம். அனைத்திற்கும் மூலம் வால்மீகி ராமாயணம். தமிழ் ஹிந்துவில் படித்தது "சீதை ராமனிடம் தன்னையும் காட்டிற்கு அழைத்துச் செல்லும்படி கூறுகின்றாள், ராமன் அதை மறுத்து பலவிதமாக சமாதானப்படுத்துகின்றான். கடைசியில் சீதை அது எப்படி இதற்கு முன்னால் இருந்த அத்தனை ராமாயணங்களிலும் சீதையை ராமன் அழைத்து செல்கின்றான், நீங்கள் மட்டும் எப்படி விட்டு விட்டு போக முடியும் என்று கேட்க, அவனும் அழைத்து செல்கின்றான்". படிக்க சுவாரஸ்யமாகவும், ராமாயணம் எந்த அளவிற்கு நமது கலாச்சாரத்தில் கலந்துள்ளது என்பதையும் காட்டுகின்றது. 

புத்த, ஜைன மதம் தோன்றி வளர்ந்த போது அவர்களும் ராமாயணத்தை தம் போக்கில் எழுதியுள்ளனர். 


தென்னிந்தியாவில் அதிகம் பேர் அறிந்தது, வால்மீகி ராமாயணம், கம்ப ராமாயணம், துளசிதாசரின் ராம மானச சரிதம்.

ராமாயணத்தை அனைவரும் படிக்கும் படி எளிதாக ஆக்கி தந்தவர்களில் முதன்மையானவர், ராஜாஜி. கல்கியில் சக்ரவர்த்தி திருமகன் என்ற பெயரில் எழுதிவந்த தொடர் ராமாயணம் என்ற பெயரில் வானதி பதிப்பகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வெகு எளிமையான நடையில், சுருக்கமாகவும் அதே சமயம் படிப்பவர்களுக்கு தேவையானதை தந்திருக்கின்றார். முக்கியமான விஷயம் இது சிறுவர்களும் படிக்கும் அளவிற்கு எளிமையாக இருக்கின்றது.