ஆன்மீகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆன்மீகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25 ஆகஸ்ட் 2016

காலந்தோறும் நரசிங்கம் - ஜடாயு


ஜடாயு பல ஆண்டுகளாக இணையத்தில் இயங்கி வருபவர். கம்பராமாயண ரசிகர். ஆர்.எஸ்.எஸ்க்காரர். (ஆமாம் முற்போக்குவாதிகள் / அறிவுஜீவிகள்  எல்லாம் கிளம்பலாம்). ஆழ்ந்த தமிழ் புலமை கொண்டவர். அவர் எழுதிய முதல் நூல் காலந்தோறும் நரசிங்கம்

ஹிந்துத்துவம் என்பதே ஒரு கெட்டவார்த்தை என்பது போன்ற தோற்றத்தை உண்டாக்க நமது போலி முற்போக்காளர்கள் முயன்றுவருகின்றனர். அவர்களுக்கு உதவ சில குழுக்களும் திரிகின்றன. ஸ்ரீராம் சேனா, அந்த சேனா என்று பல உதிரிகள் செய்யும் அடாவடித்தனங்களையும் ஹிந்துத்துவம் என்ற ஒரே குடையில் கொண்டுவர முயற்சிக்கின்றனர். எது உண்மையான ஹிந்துத்துவம்? கொஞ்சம் சிக்கலான கேள்வி. அதற்கு பதில் தர பல புத்தகங்கள் உள்ளன. ஜடாயுவின் புத்தகம் அதில் ஒன்று. 

ஹிந்துமதம் குறித்து பக்தி நோக்கில் எழுதப்படும் கட்டுரைகளுக்கோ, எழுதுபவர்களுக்கோ எவ்விதப்பிரச்சினையுமில்லை. ஹிந்துமதத்தை அரசியல், பண்பாட்டு, வரலாற்று ரீதியில் அணுகும் எழுத்தாளர்களுக்கு மட்டுமே பிரச்சினை. இந்த நிலையில் ஹிந்துமதத்தை பற்றி ஆராய்ச்சி பூர்வமாக கட்டுரை எழுதுபவர்கள் வெகு குறைவு. அவர்களில் ஒருவர் ஜடாயு.

தமிழ் ஹிந்து (ஒரிஜினல். தி ஹிண்டு இல்லை) தளத்தில் பல கட்டுரைகளை எழுதியிருக்கின்றார். காலைத்தேநீருடன் இந்துத்துவா என்று வரிசையாக பல கட்டுரைகளை எழுதினார். அக்கட்டுரைகளிலிருந்து சிலவும், வேறு தலைப்புகளில் அதே தளத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு காலந்தோறும் நரசிங்கம். இதில் வரும் பல கட்டுரைகளைப் பற்றியும் அதோடு தொடர்புடைய என் கருத்துக்கள், நினைவுகள், அனுபவங்கள் கீழே.

27 ஜூலை 2013

எங்கே பிராமணன்? - சோ

சில பல வருடங்கள் முன்பு நான் விகடன் ஆன்லைன் வாசகன்.(இப்போது அந்த குப்பையை ஓசியில் படிப்பதுடன் சரி). அப்போது பிரபலமான ஒரு தொடர் வரலாற்று நாயகர்கள். அதில் அம்பேத்கரை பற்றி எழுதிவந்தார்கள். முதல் பத்தியிலேயே, ஆரியர் வருகை, ஆரியர்கள் வந்து இங்குள்ளவர்களை ஏமாற்றினார்கள் என்று  அளந்து விடப்பட்டிருந்தது. பின்னூட்ட பெட்டியில், அந்த புளுகை எதிர்த்து எழுதியிருந்தேன். 

உடனே அடுத்தடுத்து பல வாசகர்கள் சண்டைக்கு வந்துவிட்டார்கள். விவாதம் என்று முழுவதும் கூற முடியாது. அப்போது அலுவலகத்திலும் எனக்கு வேலை அவ்வளவாக இல்லை. எனவே, இச்சண்டையை முழு நேர தொழிலாக கொண்டேன். அந்த சண்டைக்கு பாயிண்ட் தேடவே இதை வாங்கினேன். -இதிலிருந்து மகாபாரதம், இந்துமகா சமுத்திரம் என்று அவரது மற்ற புத்தகங்களும் அலமாரிக்கு வந்தன. எதற்கு சோ? என்றால், சண்டை போட வக்கீலின் துணை வேண்டுமல்லவா.

அனைவருக்கும் ஒரு முன் முடிவு இருந்தது. அதை மாற்றிக் கொள்ள தயாராக இல்லை. அடுத்தவர் கூறுவதை கேட்பதை விட, அதில் குற்றம் காண்பது மட்டுமே வேலையாக இருந்தது. விளக்கம் சொன்ன கேள்வியையே மாற்றி மாற்றி கேட்டு, மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்தது. ஒரு கட்டத்தில் சலிப்பு வந்துவிட்டது. இதனால் ஒரு பயனுமில்லை என்ற ஞானமும் வந்தது. இதற்கு பதில் நாய் வாலை நிமிர்த்தலாம் என்ற உண்மையும் தெரிந்தது.

17 பிப்ரவரி 2013

ராமானுஜர் - இந்திரா பார்த்தசாரதி

தமிழகத்தை பொறுத்தவரை சீர்திருத்தவாதி என்றவுடன் அனைவரும் கூறுவது ஈ.வெ.ராவைத்தான். அதற்கு முன்னால் செயல்பட்ட அனைவரும் மிகச்சுலபமாக மறக்க (மறக்கடிக்கப்) பட்டுள்ளனர். ராமானுஜர் அப்படிப்பட்ட மறக்கடிக்கப்பட்ட சீர்திருத்தவாதி. ராமானுஜர் விசிஷ்டாத்தைவத்தை நிலைநிறுத்தியவர், வைஷ்ணவ சம்பிராதயத்தை வழிமுறைப் படுத்தியவர் என்ற அளவிலேயே நினைவில் நிறுத்தப்படுகின்றார். மறக்கப்பட்டது அவரின் சீர்திருத்தக் கருத்துக்கள். 


எனக்கும் சோவின் புத்தகத்தை படிக்கும்வரை ராமானுஜரைத் பற்றி அதிகம் தெரியாது. எங்கோ அவர் கோபுரத்தில் ஏறி கூறிய கதையை படித்த நினைவு. அவர் அவ்வாறு கூறியதின் பின்னால் உள்ள தைரியம், அதன் நோக்கம் எல்லாம் தெரியாது. அவர் செய்த சீர்திருத்தங்கள், அனைத்து மக்களையும் அரவணைத்த பண்பு, ஆழ்வார் பாசுரங்களை பரப்பியது எல்லாம் தெரிந்து கொண்டது வெகு பின்னால்.


ராமானுஜர் இந்திரா பார்த்தசாரதி எழுதியுள்ள ஒரு நாடகம். ஆனால் இது நாடகமல்ல. ஒரு கதை வடிவில் ராமனுஜரைப் பற்றி எழுதியுள்ளார். கதையுமல்ல ஒரு வாழ்க்கை குறிப்பு. அவரின் வாழ்வில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களை கோர்த்து எழுதியுள்ளார்.