21 மே 2020

ஆவரணா - The Veil - திரை - SL பைரப்பா

அப்யாரோஹ மந்திரம் – ப்ரஹதாரண்யக உபனிஷதம் 1.3.28

ஓம் அஸதோமா ஸத்மய தமஸோ மா ஜ்யோதிர் மய ம்ருத்யோர்மா அம்ருதம் மய |
உண்மையற்ற நிலையிலிருந்து என்னை உண்மை நிலைக்கு அழைத்துச் செல்வாயாக ! அறியாமை இருளிலிருந்து என்னை அறிவுப் பேரொளிக்கு அழைத்துச் செல்வாயாக! மரணத்திலிருந்து என்னை மரணமில்லா பெரு நிலைக்கு அழைத்துச் செல்வாயாக!
இன்று ஒரு முக்கிய செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.  ராமர் கோவில் கட்ட நிலத்தை சீர்படுத்தும் பணியின் போது பழங்கால சிற்பங்கள், தூண்கள், கடவுள் சிலைகள் என ராமர் கோவிலிற்கான சான்றுகள் ஒவ்வொன்றாக வெளிப்பட்டு வருகின்றன. ஆனால் அவை அனைத்தையும் தொல்லியல் துறை முன்னமே கண்டு பிடித்து இருக்கலாமே என்ற கேள்வி எழுகின்றது. அவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள்.  கே.கே.முகமது, அயோத்தியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அங்கு கோவிலின் கட்டுமானம் இருப்பதை உறுதி செய்த ,பின்னரும், இடதுசாரிகள் உள்ளே புகுந்து அதை குழப்பி ஒரு பெரிய பிரச்சினையாக ஆக்கினார்கள். அது கோவிலே அல்ல, பெளத்த மடம் என்று வரலாற்றையே திரிக்க ஆரம்பித்தார்கள். அவர்களின் திரிப்பு இந்திய வரலாறு முழுவது பரவி கிடக்கின்றது.
திப்பு சுல்தானை விடுதலை போராட்ட வீரனாக்கி, அவன் மலபார் பகுதிகளில் செய்த அட்டூழியங்களை மறைத்தது, அவனின் மத வெறி மீது நாட்டு பற்று என்ற போர்வையை போட்டு மூடியது, காசியின் மசூதி இடிப்பிற்கு ஒரு கதை கட்டிவிட்டது என்று அவர்களின் செயல் நீளுகின்றது. காரணம், ஹிந்து மூஸ்லீம்களிடம் அமைதியை உண்டாக்குகின்றார்களாம். உண்மையின் மேல் அமையாத எதுவும் ஒரு நாள் அழிந்து படும் என்பதை அறியாத மூடர்கள். அதை கண்கூடாக அவர்களின் காசி, ராமேச்வரமான ரஷ்யாவிலேயே காணலாம். 

இன்றைக்கான தலை

கணேஷ் பாலா - அவருடைய பக்கத்தில் படம் பார்த்து கதை சொல் என இந்தப் படத்தை வெளியிட்டிருந்தார். சுஜாதாவின் தேஜஸ்வி பாதிப்பில் சும்மா எழுதியது

டொக் டொக்

"திறந்துதான் கதவு இருக்கு வா உள்ள" என்ற சத்தம் கேட்டது

"சார் நீங்க கேட்ட உப்பு போட்ட காப்பி" என்ற படி, கதவை திறந்து வந்த பேரர் உறைந்து போய் நின்றான், வலது கையிலிருந்த ட்ரே நடுங்கியது, அந்த குளிரிலும் வியர்வை அரும்பியது.

உள்ளே டீப்பாயின் மேலிருந்த தலையில் கையை வைத்து கொண்டிருந்த அவன், திரும்பி பார்த்து "வா இங்க" என்றான்.

பேரர் கால் நகர மறுத்தது. அந்த தலையை பார்த்தவாரே மெதுவாக நடந்து வந்தான். வாய் குழற "சாழ் சாழ், எனக்கு கல்லியாணம் கூட ஆகல"

"வா இங்க" என்று குரல் அழுத்தமாக வந்தது

ட்ரேயை அங்கிருந்த மேஜையில் வைத்துவிட்டு அருகில் வந்தான்

இந்த ரெண்டு விரல்ல ஒன்ன தொடு என்று சொல்ல, பேரர் பயந்து கொண்டே ஒரு விரலைத் தொட்டான், விரல் ஐஸ் மாதிரி குளிர்ச்சியாக இருந்தது.

ஹூம், என்றபடி, தன் தலையை கழட்டி டீப்பாயில் வைத்துவிட்டு, டீப்பாயிலிருந்த தலையை எடுத்து மாட்டிக் கொண்டு, பேரர் கொண்டு வந்த காப்பியை மூக்கின் அருகில் வைத்து உறிஞ்சினான். கப்பில் வெறும் பால் மட்டும் மிச்சமிருந்தது. சுவற்றில் மாட்டியிருந்த ஓவியத்தை கழட்டி, தலையுடன் சேர்த்து ஒரு பெட்டியில் வைத்துக் கொண்டு அறையை விட்டு சென்றான்.