காந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27 டிசம்பர் 2019

ஆப்பிளுக்கு முன் - சரவண கார்த்திகேயன்

காந்தியின் சர்ச்சைக்குரிய பரிசோதனைகளை வைத்து எழுதப்பட்ட புனைவு, ஆப்பிளுக்கு முன். தலைப்பை பைபிள் கதையிலிருந்து எடுத்துக் கொண்டுள்ளார். இந்நாவலை எழுதியுள்ளவர் சரவணகார்த்திகேயன். அவரது மற்ற புத்தகங்களைப் படித்ததில்லை. அவரது ஃபேஸ்புக் கருத்துக்களைப் பார்த்ததாலோ என்னவோ, அவரது எந்த எழுத்துக்களையும் படிக்க தோன்றவில்லை. ஒருவித எரிச்சலூட்டும் எழுத்துதான் இவருடையது. இருந்தும் படிக்க தோன்றியது கதையின் களம்தான். 

காந்தி மீது பலதரப்பட்ட பார்வை உண்டு. எந்தளவுக்கு அவர் புகழப்படுகின்றாரோ அதே அளவு விமர்சனமும் வைக்கப்படுகின்றது. பள்ளிப் பருவத்தில் அனைவருக்கும் அவர் ஒரு ஹீரோ. அதைத்தாண்டி பள்ளிகளில் ஏதும் கற்று தருவதில்லை. பள்ளிப் படிப்பைத் தாண்டி படிக்கும் போது மெதுவாக அவர் மீது விமர்சனங்கள் தோன்ற ஆரம்பிக்கும். அவர் மீது அனைவருக்கும் ஏதாவது ஒரு விமர்சனம் இருக்கும். ஹிந்துத்துவர்களுக்கு அவர் பேசும் ஒரு பக்க மதச்சார்பின்மை, திராவிடக்கட்சியினர் காந்தியார் என்று ஒரு மார்க்கமாக அழைப்பார்கள், அப்படி அழைப்பதே கடுப்பாகத்தான் இருக்கும். அவர் மீது விமர்சனம் சற்றுமில்லாத அவரது பக்தர்கள் என்று ஒரு கூட்டம் உண்டு. அந்த பக்தர்களையே எரிச்சலடைய வைத்த விஷயம் அவரது பாலியல் சோதனைகள்.

வெறுமனே பாலியல் சோதனை என்றால் விபரீத அர்த்தம் வருகின்றது. அவர் செய்த சோதனைகள் எல்லாம் அவர் மீதுதான், ஆனால் அந்த சோதனையில் பயன்படுத்தப்பட்ட சாதனங்கள் உயிர் உள்ளவை. அவரது பேத்தி முறை கொண்ட மநு காந்தி அவருடன் இந்த சோதனைகளில் பங்கு பெற்றுள்ளார். அவரை மையமாக வைத்து இந்த நாவல் புனையப்பட்டுள்ளது. 

22 நவம்பர் 2017

மகாத்மா காந்தியின் கொலை வழக்கு - சொக்கன்

காந்தியை கொன்றவன் யார்? கோட்சே. பள்ளி சரித்திரம் கற்று தருவது அவ்வளவுதான். காந்தியின் கொள்கைகள் பிடிக்காமல் கோட்சே என்பவன் சுட்டு கொன்றான் என்ற அளவிற்கு மேல் நமக்கு சொல்லி தருவதில்லை. சமூக வலைதளங்களில் வரும் பிதற்றல்களுக்கு அளவில்லை. காந்தி கொலையைப் பற்றி ஒரு முழுமையான சித்திரத்தை அறிந்து கொள்ள உதவும் ஒரு நல்ல புத்தகம் இது.

காந்தி கொலை செய்யப்பட்டார், குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர் என்று இரண்டு வரிகளில் முடிகின்ற விஷயமல்ல. காந்தியை கொல்ல நினைக்கும் அளவிற்கு ஒருவன் செல்லக் காரணம் என்ன? தேசம் முழுவதும் மதித்த ஒருவரை ஒருவன் கொல்ல நினைக்கும் போது அவனின் தரப்பு என்ன, எந்த ஒரு வலுவான காரணம் அவனை அங்கு தள்ளுகின்றது. பள்ளியில் குண்டுவைக்கும் ஒருவனுக்கே, அவனுக்கும் காரணம் இருக்கும் என்று அனுதாபத்தோடு பார்க்க வேண்டும் என்று பல முற்போக்காளர்கள் கூறுகின்றார்கள்.

கோட்சேவிற்கான காரணம் என்ன?
என்ன?
கோட்சேவிற்கு காரணம் கேட்க கூடாதா?
ஏன்?
அவன் சிறுபான்மை சமூகத்தவன் இல்லையா?
ம்ம்ம், சரி நான் முற்போக்கு வாதியில்லையே அதனால் பரவாயில்லை, காரணம் என்னவென்று பார்ப்போம் என்று படித்தேன்.