பா.ரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பா.ரா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

09 மார்ச் 2020

இறவான் - பாரா

யதிக்கு பின்னால் எழுதப்பட்ட நாவல். யதியின் ஹேங்க் ஓவர் என்று சொல்லலாம். ஒரு இசைக்கலைஞனின் கதை என்று பொதுவாக அனைவராலும் கூறப்படுகின்றது. நூற்றாண்டிற்கு முன்னால் இசைக்கப்பட்ட ஹீப்ரூ மொழி இசை ஒருவனால் வாசிக்க முடிகின்றது, சிம்போனியை ஒரு நாற்பது பக்க நோட்டில் எழுத முடிகின்றது, கஞ்சா அடிக்கின்றான், சம்பந்தமில்லாமல் பேசுகின்றான். யதியில் தப்பிய ஏதோ ஒரு சகோதரன் இங்கு வந்து குதித்துவிட்டான் என்றுதான் சொல்ல வேண்டும், அந்தளவிற்கு மாயாஜாலம். 

கதை என்ற வஸ்து இருந்தால் அதைப் பற்றி ஏதாவது எழுதலாம், ஒரு க்ராக்கின் வாழ்க்கையை துண்டு துண்டாக வெட்டி போட்டிருக்கின்றார். ஒருவனுக்கு திடீரென்று தான் ஒரு இசை மேதை என்றும், யூதன் என்றும் தோன்றுகின்றது. அதன் பின் அவன் என்ன ஆனான் என்று வளவளவென்று பல பக்கங்களில் அடித்து துவைத்திருக்கின்றார் வாசகனை.

கதையுடன் எங்கும் வாசகனை ஒன்ற விடக்கூடாது என்பதில் பாரா மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளார் என்றே சொல்லவேண்டும். 

28 பிப்ரவரி 2020

யதி - பா. ராகவன்

சில நாட்களுக்கு முன்னால் ஒரு காணொளி பலரால பகிரப்பட்டு வந்தது. இமயமலையில் ஒரு சன்னியாசி, சிறிய கோவணம் மட்டும் அணிந்து கொண்டு உறை பனியில் நடந்து சென்று கொண்டு இருக்கின்றார். பனியில் அமர்ந்து அவரது நித்யகர்மாவை முடித்து விட்டு செல்கின்றார். இன்னொரு காணொளியில் அதே இமயச்சாரலில் குளிர்ந்த நீரில் ஆனந்தமாக குளித்துக் கொண்டிருக்கின்றார் மற்றொரு சன்னியாசி. 

இதைப் பார்க்கும் மேலை நாட்டவர்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம்.  நமக்கு நம்ப கடினமான விஷயம் அல்ல, இவர்களைப் போன்று ஆயிரக்கணக்கானவர்கள் வாழும் நாடு இது. இந்திய வாழ்க்கை முறையில் துறவறம் என்பது மிகவும் இயல்பானது. பிரம்மச்சர்யம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம், சன்னியாசம் என்று வாழ்க்கை படிநிலைகளை முன்னோர்கள் வகுத்து வாழ்ந்து வந்தனர். சிலருக்கு துறவறமே முழு வாழ்க்கை முறையாகவும் போகலாம்.

துறவிகளைப் பற்றிய கதைகளை ஆதிகாவியத்திலிருந்து நாம் படித்து வருகின்றோம். சித்தர்கள், யோகிகள், முனிவர்கள், ரிஷிகள். ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை வழிபடுபவர்கள், யோக சாதகர்கள், காவிய ஆசிரியர்கள், ஜாபாலி, சார்வாகர் போன்ற நாத்திகர்கள், மருத்துவத்தை அறிந்த சித்தர்கள் என்று பல வகை துறவிகள். துறவறம் என்றாலும் அவர்களாலும் முழுவதும் துறந்து செல்ல முடியாது, அவர்களுக்கும் சில கடமைகள் இருக்கலாம். ரமணர், ராமகிருஷ்ண பரமஹம்சர், காஞ்சி பெரியவர், விவேகானந்தர், அரவிந்தர்  போன்ற துறவிகள் அனைத்தையும் துறந்து சென்றுவிடவில்லை. காஞ்சி பெரியவர் ஒரு மடத்தின் தலைவர், அரவிந்தர் அரசியல் தொடர்புடையவர், விவேகானந்தர் அமெரிக்கா வரை சென்று பேசினார். ஏன் துறவிகள் என்ற வார்த்தை என்றால்,  செய்யும் அனைத்தையும் பற்றின்றி ஒரு கடமையாக செய்ததால் அவர்கள் துறவிகள்.


18 மே 2017

கொசு - பா. ராகவன்

அரசியலை அடிப்படையாக் கொண்ட எழுத்துக்கள் மிகக்குறைவு. சோவின் நாடகங்கள் தனி ரகம். கதைகள், நாவல்கள் வெகு குறைவு. இந்திரா பார்த்தசாரதி வேதபுரத்து வியாபாரிகள், மாயமான் வேட்டை  போன்ற நாவல்களை எழுதியிருக்கின்றார். வேறு யாரும் எழுதியிருக்கின்றார்களா என்று தெரியவில்லை. கொசு, ஒரு அரசியல் நாவல். அரசியல்வாதிகளை பற்றி பேசும் நாவல். தலைப்பை கண்டு வழக்கமான பா ராகவனின் நகைச்சுவை கட்டுரை தொகுப்பு என்று நினைத்து கொண்டேன். நாவல் என்றது கொஞ்சம் ஆச்சர்யம். அவரது தொடர்கதை ஒன்றை கல்கியில் படித்த நினைவிருக்கின்றது. அலை உறங்கும் கடல். ஓரளவிற்கு நல்ல கதை.

தொண்டனுக்கு ஒரு நல்ல பதவியை அடைவது என்பது எப்போதும் கனவாகவே இருக்கும். அந்த கனவுடன் இருக்கும் முத்துக்குமாருக்கு அவன் கட்சியின் சீனியர்கள் கற்று தருவது என்ன என்னபதுதான் கொசு. கட்சியில் பல ஆண்டுகளாக காலம் தள்ளியும் வெறும் வட்டமாக இருப்பவருக்கு, பெரியவட்டமாக ஆசை. அதற்கு ஐடியா கேட்க முத்துக்குமாரை அழைக்கின்றார். அதிலிருந்து மெதுவாக முத்துக்குமார் முன்னேற முயற்சிக்கின்றான். முதல்வன் பட இறுதியில் ஒரு வசனம் வரும், என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டீங்களேடா, அதுதான் இங்கும்.