அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30 ஜூன் 2021

எம்.எல் - வண்ணநிலவன்

வண்ணநிலவன் சமீபத்தில் கி.ரா மறைந்த போது ஏதோ எழுதி அனைவரிடமும் வாங்கி கட்டிக் கொண்டார். வண்ணநிலவனின் புனைவுகள் எதையும் படித்ததில்லை. வண்ணநிலவன் துர்வாசர் என்ற பெயரில் துக்ளக் இதழில் எழுதிவந்த அரசியல் கட்டுரைகளை மட்டுமே படித்திருக்கிறேன். துர்வாசரின் கட்டுரைகள் கொஞ்சம் கடுகடு ரகத்திலேயே இருக்கும், கோபம், கடுப்பு, வயதானவர்களுக்கு வரும் இயல்பான எரிச்சல் கலந்தது போலவே இருக்கும். அதுவே இவரின் புனைவுகளை படிக்க கொஞ்சம் தடையாக இருந்தது. இதோடு சேர்ந்து ஜெயமோகனும் இவரை மிகக்கடுமையாக விமர்சித்து இருந்தார். ஆனால் வண்ணநிலவனின் கடல்புரத்தில் நாவலைப் பற்றியும், எஸ்தர் சிறுகதையை பற்றியும் பலர் சிறப்பாகவே கூறியிருந்தனர். எம்.எல் நாவலே நான் படிக்கும் வண்ணநிலவனின் முதல் நாவல். 


எம்.எல். மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்ட். கம்யூனிசம் என்பதே நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்று என்பதை இன்று அனைவரும் உணர்ந்து இருப்பார்கள். அதிலும் ஆயுதப்போராட்டம் என்பது சாத்தியமே இல்லாத ஒன்று என்பதும் மிகத்தெளிவாக புரிந்திருக்கும். கம்யூனிசத்தின் கோர முகத்தை பஞ்சம் படுகொலை பேரழிவு என்ற புத்தகத்தில் அரவிந்தன் நீலகண்டன் ஆதரங்களுடன் விவரித்திருக்கின்றார். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் சில முகங்களை பற்றி ஜெயமோகன் பல கட்டுரைகளில் எழுதியிருக்கின்றார், அவரது பின்தொடரும் நிழலின் குரல், கட்சி தொண்டர்களின் பரிதாப நிலையைப் பற்றி பேசுகின்றது. ஒநாய் குலச்சின்னம், புலிநகக் கொன்றை போன்ற நாவல்களிலும் கம்யூனசத்தின் கோரமுகத்தை காணலாம்.

27 அக்டோபர் 2018

சோவின் சில புத்தகங்கள்

ஒசாமஅசா

இது போன்று தலைப்புகள் எல்லாம் இந்த மனிதருக்குத்தான் தோன்றும். சோவின் அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் தொடரின் நீட்சி என்று இதை  சொல்லலாம். அந்த தொடரில் வந்த பல சம்பவங்கள் இதிலும் இருக்கின்றன. அதில் வந்த சில சம்பவங்களின் நீட்சியும் உண்டு.  உண்மையில் சோவிற்கு அதிர்ஷ்டம் என்பது உண்டு, அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அதிர்ஷ்டம் தந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள், ஒசாம அசா இரண்டையும் சேர்த்து ஒரே புத்தகமாக மாற்றலாம். செலவு குறையும்.

திரையுலகை திரும்பிப்பார்க்கின்றேன்

சோவின் திரையுலக அனுபவங்கள். அதிக சுவாரஸ்யம் ஏதுமில்லை. முடிந்தவரை யாரையும் புண்படுத்தக்கூடாது என்ற எண்ணத்தில்  எழுதியிருக்கின்றார். கட்டுரைகளை விட, இணைப்பாக வந்திருக்கும்  ஒரு நான்கு வயது மாணவன் தேர்வு எழுதப்போகும் கதை படும் பாடு சுவாரஸ்யம். பல நாள் கழித்து பயங்கரமாக சிரித்து, வீட்டு கொலுவிற்கு வந்தவர்கள் பீதியடைய காரணமாக இருந்தது.

காமராஜரை சந்தித்தேன் 

காமராஜரை பற்றிய ஒரு நல்ல சித்திரம் உண்டாக்கும் கட்டுரைத் தொகுப்பு. காமராஜர் இறந்த வேகத்தில் எழுதியதால் வழக்கமான பாணியில் இல்லாமல், வெகுவாக உணர்ச்சிவசப்பட்டு எழுதியிருக்கின்றார். கட்டுரையும் சட்டென்று முடிந்தது போன்ற உணர்வு. காமராஜரைப் பற்றி பலர் எழுதிய கட்டுரைகளும் சேர்ந்துள்ளது. 

இன்றைக்கு மீம்ஸ் மட்டும் படித்துவிட்டு அரசியல் புளிகளாக இருப்பவர்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள் இவை. அரசியல் என்பது எப்படி இருந்து இன்றைய கதியை அடைந்திருக்கின்றது என்பதை காட்டும் கட்டுரைகள்.

21 டிசம்பர் 2017

நரசிம்ம ராவ்: இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி - ஜெ. ராம்கி

1991ம் ஆண்டு என்றவுடன் நினைவிற்கு வருவது ராஜீவ் காந்தியின் படுகொலை. இந்திய சரித்திரத்தை மாற்றியமைத்த சில சம்பவங்களில் அதுவும் ஒன்று. அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியின் விளிம்பில் இருந்தது. ராஜீவ்காந்தி படு கொலைக்கு முன்னால் நடந்த வாக்குபதிவுகளில் காங்கிரஸ் பெற்ற ஓட்டுக்கள் குறைவே. ராஜீவின் அனுதாப அலை காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பலத்தை சேர்த்துவிடவில்லை. ஒரு மைனாரிட்டி அரசாகத்தான் அமரமுடிந்தது. அந்த அரசிற்கு முன்னாலும் பின்னாலும் பல அரசுகள் முழு ஆதரவின்றி நடந்திருக்கின்றன. எதுவும் தன் ஆட்சிகாலத்தை முழுவதும் முடித்ததில்லை. ஆட்சியில் இருந்த போதும் ஏதும் செய்ய முடியாமல் ஆட்சியை காப்பாற்றி கொள்வதை மட்டுமே செய்ய முடிந்தது.

நிலையான ஆட்சியை விட மிகப்பெரிய இக்கட்டாக இருந்தது அன்றை இந்தியாவின் பொருளாதர நிலை. முந்தைய வி.பி.சிங், ராஜீவ் காந்தி போன்றவர்களின் ஆட்சியின் திறன், இந்திய பொருளாதாரத்தை பாதாளத்தில் தள்ளியிருந்தது. புதிய கடனுதவி ஏதும் கிடைக்காமல், அந்நியச் செலாவணி குறைந்த நிலையில், வெளிநாட்டு இந்தியர்களும் தங்கள் முதலீடுகளை திரும்ப பெற ஆரம்பித்திருந்தனர். காஷ்மீர், பஞ்சாப், அஸ்ஸாம் என்று உள்நாட்டு கலவரங்கள் வேறு. இவையனைத்தையும் திறம்பட கையாண்டு, நாட்டை மீட்டவர் இன்று பலராலும் மறக்கப்பட்ட, சொந்த கட்சியினராலேயே திட்ட்மிட்டு மறக்கடிக்கப்பட்ட ஒரு தலைவர், பி.வி.நரசிம்மராவ்.

22 நவம்பர் 2017

மகாத்மா காந்தியின் கொலை வழக்கு - சொக்கன்

காந்தியை கொன்றவன் யார்? கோட்சே. பள்ளி சரித்திரம் கற்று தருவது அவ்வளவுதான். காந்தியின் கொள்கைகள் பிடிக்காமல் கோட்சே என்பவன் சுட்டு கொன்றான் என்ற அளவிற்கு மேல் நமக்கு சொல்லி தருவதில்லை. சமூக வலைதளங்களில் வரும் பிதற்றல்களுக்கு அளவில்லை. காந்தி கொலையைப் பற்றி ஒரு முழுமையான சித்திரத்தை அறிந்து கொள்ள உதவும் ஒரு நல்ல புத்தகம் இது.

காந்தி கொலை செய்யப்பட்டார், குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர் என்று இரண்டு வரிகளில் முடிகின்ற விஷயமல்ல. காந்தியை கொல்ல நினைக்கும் அளவிற்கு ஒருவன் செல்லக் காரணம் என்ன? தேசம் முழுவதும் மதித்த ஒருவரை ஒருவன் கொல்ல நினைக்கும் போது அவனின் தரப்பு என்ன, எந்த ஒரு வலுவான காரணம் அவனை அங்கு தள்ளுகின்றது. பள்ளியில் குண்டுவைக்கும் ஒருவனுக்கே, அவனுக்கும் காரணம் இருக்கும் என்று அனுதாபத்தோடு பார்க்க வேண்டும் என்று பல முற்போக்காளர்கள் கூறுகின்றார்கள்.

கோட்சேவிற்கான காரணம் என்ன?
என்ன?
கோட்சேவிற்கு காரணம் கேட்க கூடாதா?
ஏன்?
அவன் சிறுபான்மை சமூகத்தவன் இல்லையா?
ம்ம்ம், சரி நான் முற்போக்கு வாதியில்லையே அதனால் பரவாயில்லை, காரணம் என்னவென்று பார்ப்போம் என்று படித்தேன்.

18 மே 2017

கொசு - பா. ராகவன்

அரசியலை அடிப்படையாக் கொண்ட எழுத்துக்கள் மிகக்குறைவு. சோவின் நாடகங்கள் தனி ரகம். கதைகள், நாவல்கள் வெகு குறைவு. இந்திரா பார்த்தசாரதி வேதபுரத்து வியாபாரிகள், மாயமான் வேட்டை  போன்ற நாவல்களை எழுதியிருக்கின்றார். வேறு யாரும் எழுதியிருக்கின்றார்களா என்று தெரியவில்லை. கொசு, ஒரு அரசியல் நாவல். அரசியல்வாதிகளை பற்றி பேசும் நாவல். தலைப்பை கண்டு வழக்கமான பா ராகவனின் நகைச்சுவை கட்டுரை தொகுப்பு என்று நினைத்து கொண்டேன். நாவல் என்றது கொஞ்சம் ஆச்சர்யம். அவரது தொடர்கதை ஒன்றை கல்கியில் படித்த நினைவிருக்கின்றது. அலை உறங்கும் கடல். ஓரளவிற்கு நல்ல கதை.

தொண்டனுக்கு ஒரு நல்ல பதவியை அடைவது என்பது எப்போதும் கனவாகவே இருக்கும். அந்த கனவுடன் இருக்கும் முத்துக்குமாருக்கு அவன் கட்சியின் சீனியர்கள் கற்று தருவது என்ன என்னபதுதான் கொசு. கட்சியில் பல ஆண்டுகளாக காலம் தள்ளியும் வெறும் வட்டமாக இருப்பவருக்கு, பெரியவட்டமாக ஆசை. அதற்கு ஐடியா கேட்க முத்துக்குமாரை அழைக்கின்றார். அதிலிருந்து மெதுவாக முத்துக்குமார் முன்னேற முயற்சிக்கின்றான். முதல்வன் பட இறுதியில் ஒரு வசனம் வரும், என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டீங்களேடா, அதுதான் இங்கும்.

03 மார்ச் 2017

நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன்

கிண்டில் கையில் கிடைத்ததும் பல புத்தகங்களை படிக்க வாய்ப்பு கிடைக்கின்றது. பல புத்தகங்களை படிக்க ஆர்வமிருந்தும் விலை காரணமாக வாங்காமல் விட்டிருந்தேன். கிண்டில் அன்லிமிட்டடில் இலவசமாக படிக்க முடிகின்றது. நன்றாக இருந்தால் வாங்கிக்கொள்ளலாம். நல்ல டீல்.

இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினையின் வயது நமது சுதந்திர இந்தியாவின் வயதைவிட மிக அதிகம். அடிக்கடி பேப்பரில் வரும் குண்டுவெடிப்புகள், பதில் தாக்குதல்கள் என்ற அளவில் மட்டுமே பரிச்சியம். அந்த பிரச்சினையில் அடி வேரில் ஆரம்பித்து அலசும் ஒரு புத்தகம் இது. குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக ஒரு வருடம் வந்திருக்கின்றது. பா. ராகவனின் எழுதியிருக்கின்றார்.

இஸ்ரேல் - பால்ஸ்தீன பிரச்சினை இரண்டு நாட்டிற்கான பிரச்சினை என்பதை விட இரண்டு இனங்களுக்கிடையிலான பிரச்சினை என்பதுதான் சரி. சிங்கள - தமிழர் பிரச்சினை போல. யூத - அரேபிய இனத்தவர்களுக்கிடையிலான மோதல் இன்று யூத - இஸ்லாமிய மோதலாக பரிணமித்துள்ளது.  எழுதியிருப்பவர் இரண்டு மதத்தை சாராதவர், அதனால் நடுநிலையாக எழுதியிருப்பார் என்று நம்பியிருந்தால் மன்னிக்கவும். இல்லை.  வெகு திறமையாக எழுதப்பட்டு,  ஒரு வேளை நடுநிலையாக, பக்கச்சார்பில்லாமல் தான் எழுதப் பட்டிருக்கின்றதோ என்ற தவறான தோற்றத்தை தரும் புத்தகம்.

07 நவம்பர் 2016

நம்பக்கூடாத கடவுள் - அரவிந்தன் நீலகண்டன்


ஹிந்துத்துவ சிந்தனைகள் என்று உப தலைப்புடன் வந்துள்ளது. தமிழ்பேப்பர் இணைய தளத்தில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு

பலருக்கு ஹிந்த்துதுவம் என்பதை நேரடியாக ஏற்றுக்கொள்ள சில தடைகளிருக்கும். காரணம், தங்களுக்கு தாங்களே ஒரு நேர்மையாளன் பட்டம் தந்திருப்பார்கள். அடுத்தவன் என்ன நினைப்பானோ என்ற கவலை வேறு. தான் நம்பும் ஒரு விஷயம் உயர்ந்தது என்பதை நம்ப மறுப்பவர்கள், தான் நம்பும் சில விஷயங்களால் ஒரு தாழ்வுணர்ச்சி கொண்டவர்கள்.  இவர்களை மாற்றுவது என்பது எளிதல்ல. இன்னொரு வகை, ஹிந்துத்துவம் என்பதை ஒரு அடிப்படைவாத குழு என்ற வகையில் நினைப்பது. தவறான புரிதல். உண்மையில் இத்தகையவர்களே அதிகம். இதற்கு காரணம் கூட நமது பாரம்பர்யம் கற்று தந்திருக்கும் பெருந்தன்மையே. ஒரு வகையில் அவர்களும் இந்துத்துவர்களே.

பலர் நமது பாரம்பர்யம் என்பதை பக்தியோடும், புராணங்களோடும் நிறுத்திக் கொள்கின்றனர். பலருக்கு உண்மையில் நமக்கு இருக்கும் பாரம்பர்யம் எத்தகையது என்பதை பற்றிய் முழு பார்வையும் கிடையாது.  இந்த கட்டுரைகள் அதை நமக்கு கற்று தருகின்றன.


அரவிந்தன் நீலகண்டன், பல ஆண்டுகளாக இணையத்தில் எழுதி வரும் சிந்தனையாளர். எந்த ஒரு விஷயத்தையும் போகின்ற போக்கில் அள்ளி விடாமல் அதற்கான தரவுகளை பல இடங்களிலிருந்து தருவது சிறப்பு. அதற்கான உழைப்பு பெரியது. ஆச்சர்யத்தை தருவது.

30 ஜூலை 2016

அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் - சோ

சோ.

ஒரு எழுத்து என்றாலும் அதன் பின்னால் இருக்கும் ஆளுமை பெரியது. வழக்கறிஞர், நாடக நடிகர், நாடக ஆசிரியர், நாடக இயக்குனர், திரைப்பட நடிகர், இயக்குனர், வசனகர்த்தா, பத்திரிக்கை ஆசிரியர், எழுத்தாளர், அரசியல்வாதி என்று பல முகங்கள். அவரது சமீபத்திய சில செயல்பாடுகளில் உடன்பாடில்லை என்றாலும், எனக்கு மிகப்பிடித்த ஒருவர். இவரின் பலமும், பலவீனமும் இவரது நகைச்சுவை உணர்வே.

மகாபாரதத்தை நன்கு கற்றவர். அவரது மகாபாரதம் பேசுகின்றது நூலே, எனக்கு மகாபாரதத்தை பற்றிய மற்றொரு பார்வையை அளித்தது. அதுவரை எனக்கு அது ஒரு சுவாரஸ்யமான கதை நூலே. ராமாயணமும், அதே போல் கம்பராமாயண பகுதிகளுடனும், துளசிதாசரின் ராமாயண பகுதிகளையும் சேர்த்து தந்திருந்தார். 

அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் அவரது வாழ்க்கையில் அவர் சந்தித்த முக்கியமானவர்களுடனான அவரது அனுபவங்கள். ஆரம்பம் முதல் கடைசி வரை அக்மார்க் சோ குசும்பு. இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதுதான் அவரது உண்மையான குணம் என்றால், அனைத்தும் அதிர்ஷ்டம்தான். கடவுள் அவருக்கான வாய்ப்பை அருமையாக அமைத்து தந்திருக்கின்றார், அதை அவர் அருமையாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். உண்மையில் சுவாரஸ்யமான திருப்பங்கள் நிறைந்த அனுபவங்கள். அனைத்தும் தற்செயலாக நடந்தவை, ஆனால் அதை ஏற்றுக் கொண்டு அதில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பு அவரிடம் இருந்திருக்கின்றது.

10 செப்டம்பர் 2015

உப்புவேலி - ராய் மாக்ஸிம்

வரலாற்று பாடம் என்பது எனக்கு எப்போதும் தலைவலியை தரும் ஒன்று. குறிப்பாக வருடங்கள். ஆறாம் வகுப்பிலோ, எட்டாம் வகுப்பிலோ, ஒரு பெரிய பகுதி. இந்திய வரலாற்றை முழுவதும் கரைத்து புகட்டும் ஆர்வத்தில் எவரோ தயாரித்தது. ஏகப்பட்ட வருடங்கள், காந்தி இர்வின் ஒப்பந்தம், மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம். தேர்வில் அப்படியே எழுதுவது என்பது, புத்தகத்தை வைத்துக் கொண்டு கூட சாத்தியமில்லாதது. என்னைப் பலரின் தூக்கத்தை கெடுத்த , பத்தாம் வகுப்பு வரை  படித்த வரலாற்றில் ஒரு வரி கூட இல்லாத ஒன்றை பற்றி பேசுகின்றது இந்த புத்தகம்.

ராய் மாக்ஸம் என்னும் ஆங்கிலேயேர் எழுதிய THE GREAT HEDGE OF INDIA என்னும் நூலின் தமிழாக்கம். தமிழில் சிறில் அலெக்ஸ் மொழி பெயர்த்துள்ளார். இப்புத்தகம் வெளிவந்த பொழுதே ஜெயமோகன் இதைப் பற்றி சிறந்த அறிமுகத்தை தந்திருந்தார். ஆங்கிலத்தை விட தமிழில் படிப்பது எனக்கு சுலபமாக இருந்தது.

இணையத்தில் கண்டதையும் படிக்க ஆரம்பித்த புதிதில் தன் விஷயங்கள் புரியாமல் இருந்தன. முக்கியமானது பலருக்கு இருக்கும் இந்திய வெறுப்பு. அவர்களை பொறுத்த வரை இந்தியா எப்போதும் சிறப்பாக இருந்ததே இல்லை. ஆங்கிலேயர்கள் வந்த பின்னால் தான் இந்தியா பல துறைகளில் முன்னேறியது. எப்படி சிலரால் அந்தளவிற்கு முட்டாள்த்தனமாக யோசிக்க முடியும் என்பது ஆச்சர்யமாகவும், பின்னர் வேடிக்கையாகவும் இருந்தது.

17 செப்டம்பர் 2014

பின் தொடரும் நிழலின் குரல் - ஜெயமோகன்

புகாரின். லெனின் குழுவிலிருந்த முக்கிய நபர். கம்யூனிச அரசை கட்டமைத்த ஒரு முக்கிய தலைவர். அதே கம்யூனிச அரசால் துரோகி என தண்டிக்கப்பட்டவர். ஆனால் அவர் குற்றமற்றவர் என்று முப்பது ஆண்டுகளுக்கு பின்னால் அறிவிக்கப்பட்டது. அக்கதையை ஒரு இழையாக வைத்து சுற்றி பல வித இழைகளல் பின்னப்பட்டது இக்கதை.

அரசியல் நாவல் என்றவுடன் தயங்கி தயங்கியே வாங்கினேன். அதுவும் ரஷ்ய நாட்டு தலைவரை பற்றிய கதை என்றவுடன் ஒரு மாதிரி செயற்கையாக இருக்குமோ என்ற எண்ணம் வேறு இருந்தது. (ஏதாவது மொழி பெயர்ப்பு புத்தகம் போல இருந்து வைத்தால் என்ன செய்வது என்ற எண்ணம்). ஜெயமோகன் என்னும் பெயரை நம்பி களத்தில் இறங்கினேன். நம்பினார் கெடுவதில்லை. கொஞ்சம் கூட தொய்வடையாமல், நடு இரவு தாண்டிய பின்னும் படிக்க வைத்த புத்தகம், இரவு இரண்டு மணி, மூன்று மணி வரை. எந்த புத்தகத்தையும் அடுத்தடுத்து படித்ததில்லை, இது என்னை மூன்று முறை தொடர்ச்சியாக படிக்க வைத்துவிட்டது. 

வெகுநாட்களுக்கு நாவல் என்றால் தொடர்கதை என்பதுதான் எண்ணம். கல்கி, சுஜாதா இவர்களின் புத்தகங்கள் அனைத்தும் தொடர்கதைகள் என்பதால் அந்த எண்ணம் அப்படியே இருந்தது. படித்த ஒன்றிரண்டு ஜெயகாந்தனின் நாவல்களும் தொடர்கதைகளாக வந்தவையே. அந்த எண்ணத்தை உடைத்தெறிந்தவர் அசோகமித்திரன். அவரின் பதினெட்டாம் அட்சக்கோடு, இப்படியும் நாவல் எழுத முடியுமா என்று வியப்பை தந்தது, அடுத்தடுத்து அவரது கரைந்த நிழல்கள், ஒற்றன், தண்ணீர் எல்லாம் ஒவ்வொன்று ஒவ்வொரு வகை. நாவலின் பல சாத்தியங்களை உணர வைத்தது. இது மற்று மொரு சாத்தியம். நாவல்களில் விவாதங்கள் வருவதுண்டு, ஜெயகாந்தன் கதைகளில், இந்திரா பார்த்தசாரதி கதைகளில். ஆனால் அவை அனைத்தும் என் பார்வையில் வறண்டு போனவை. அதில் எவ்வித உயிர்ப்பும் இல்லை, ஒரு பிரச்சாரம். இந்த நாவல், அனைத்து சாத்தியங்களையும் கையாண்டுள்ளது, சிறுகதை, நாடகம், அபத்த நாடகம், கடிதம், கவிதை, கட்டுரை. அதற்கான யுக்தி அபாரம். உதவிக்கு பல உண்மை பாத்திரங்கள் ஜெயமோகன், ராமசாமி (சுந்தர ராமசாமி?). பல பாத்திரங்கள் பல உண்மை மனிதர்களிடமிருந்து உருவாகியிருக்கலாம், யாருக்கு தெரியும். 

எச்சரிக்கை : சற்றே பெரிய கட்டுரை. பெரிய புத்தகமல்லவா?

12 ஆகஸ்ட் 2014

லஜ்ஜா (அவமானம்) - தஸ்லிமா நஸ்ரின்

லஜ்ஜா - தஸ்லிமா நஸ்ரினின் உயிருக்கு விலை வைத்த புத்தகம். இப்போது தமிழில். கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஜவர்லால் (ஜவகர்லால் இல்லை) மொழி பெயர்த்துள்ளார். 

உலகெங்கும் பரபரப்பை கிளப்பிய புத்தகம் என்று கூறப்படுகின்றது. நமது உள்ளூர் (இந்து) மதச்சார்பற்றவர்களுக்கு பங்களாதேசத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக தஸ்லிமா நஸ்ரின் தொடுத்த போரை எதிர்த்து போராட ஒரு வாய்ப்பை அளித்த புத்தகம். 

அவர் மீது பத்வா பிறப்பித்து, தலைக்கு விலை வைக்கும் அளவிற்கு இதில் என்ன இருக்கின்றது என்ற ஆர்வத்தில்தான் புத்தகத்தையே வாங்கினேன். ஒரு வேளை இஸ்லாமிற்கு எதிராக பல கருத்துக்கள் இருக்குமோ என்று நினைத்தால், அப்படி எதுவுமில்லை. இதற்கு பத்வா என்றால், நாட்டிலிருக்கும் பல செய்தி பத்திரிக்கைகளுக்கும் சேர்த்து பத்வா பிறப்பிக்க வேண்டும், ஊரிலிருக்கும் எல்லா செய்திபத்திரிக்கையாளர்கள் தலைக்கும் விலை வைக்க வேண்டும்.

இந்தியாவில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி எனப்படும் கட்டிடத்தை இடித்ததன் பின் விளைவை பற்றியதுதான் இக்கதை. இந்துக்களின் நிலை எல்லா நாட்டிலும் ஒரே மாதிரிதான். அவர்களுக்கு அரசியல் ஆதரவு கிடையாது. இப்போது பா.ஜ.க அசுரபலத்துடன் இருக்கின்றது. இருந்தாலும் அவர்களாலும் இந்துக்களுக்கு முழு ஆதரவு தரமுடியாது. காரணம் மதச்சார்பன்மை என்ற பெயரில் பிற கட்சிக்கள் எடுக்கும் ஓட்டு பிச்சை. இந்துக்கள் அதிகமிருக்கும் இந்தியாவில் இந்த நிலை என்றால், இந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கும் மற்ற இடங்களில், அதுவும் அடிப்படைவாதிகள் கையில் அதிகாரம் இருக்கும் இடத்தில், மற்ற மதங்களை அடியோடு வெறுக்கும் மதத்தலைவர்களின் கையில் அதிகாரம் இருக்கும் இடத்தில் இந்துக்களின் நிலை எப்படி இருக்கும். அதைத்தான் காட்டுகின்றது இப்புத்தகம்.

27 ஏப்ரல் 2014

மாயமான் வேட்டை

வெந்து தணிந்த காடு சுட்ட சூட்டின் ரணம் ஆறாமல் இப்புத்தகத்தை எடுத்தேன். நல்ல வேளை சூட்டின் வலி கொஞ்சம் குறைந்தது.

அரசியல்.டெல்லி வாலாக்களின் கதைகளில் கொஞ்சம் மறைவாக எட்டி பார்க்கும் ஒரு விஷயம். வேதபுரத்து வியாபாரிகளில் கொஞ்சம் மிகைப்படுத்தி கூறிய அரசியல் விளையாட்டை இதில் கொஞ்சம் யதார்த்ததிற்கு கொண்டு வந்துள்ளார் என்று கூறலாம்.

அரசியலை பற்றி அனைவருக்கும் ஏதாவது ஒரு கருத்து இருக்கும், ஆனால் அதில் இறங்குவது என்பது அனைவராலும் முடியாது. முழுக்க முழுக்க நல்லவர்களாக இருந்தாலும் கூட அரசியலில் தாக்கு பிடிப்பது சந்தேகம். ஏனென்றால் அரசியல் ஒரு புத்திசாலிகளின் விளையாட்டு. சதுரங்கம் போல. பலவித காய்களின் இயல்பையும், சேர்க்கைகளையும் ஆராய்ந்து, பலவித சினாரியோக்களை (தமிழ் வார்த்தை என்ன?) ஆராய்ந்து விளையாட வேண்டிய விளையாட்டு. எப்போதும் வெற்றி என்பது சாத்தியமில்லை.

நாட்டிற்கு நல்லது செய்ய நினைப்பது மட்டும் போதும் என்ற எண்ணம் எல்லாம் அரசியலுக்கு உதவாது. அன்னா ஹசாரே மாதிரி ஆக வேண்டியதுதான். கொஞ்சம் கிரிமினல் புத்தியும் வேண்டும் . கேஜ்ரிவால் மாதிரி இல்லை, மோடி மாதிரி கடின உழைப்புடன் சாதுர்யமும் வேண்டும்.

07 பிப்ரவரி 2014

கன்னிநிலம் - ஜெயமோகன்

வழக்கமாக ஒவ்வொரு எழுத்தாளர்களுக்கும் ஒவ்வொருவிதமான எழுத்துக்களே கை கூடி வரும். அவர்களின் ஏரியா தாண்டினால் சொதப்பிவிடும். ஆனால் ஜெயமோகனுக்கு எல்லா வகை எழுத்தும் அட்டகாசமாக வருகின்றது.

வெள்ளிக்கிழமை வேலை செய்தால் உடலுக்கு நல்லதில்லை என்பதால், இவர் தளத்தை மேய்ந்து கொண்டிருந்தேன். ஏகப்பட்டதை எழுதி குவித்திருக்கின்றார், மூடுக்கு தகுந்தமாதிரி ஒன்றிலிருந்து ஒன்றாக தாவுவது வழக்கம். இன்று இக்கதை. ஆன்லைனில் படிப்பது அவ்வளவாக பிடிக்காது, ஆனால் வேறுவழியில்லை. சமீபத்தில் இப்படி ஒரு விறுவிறுப்பான கதையை படிக்கவில்லை. 

வடகிழக்கு மாநிலத்தில் ஏதோ ஒரு மூலையில், பர்மா எல்லையில் இருக்கும் ஒரு ராணுவ முகாமில் தொடங்கும் கதை, யாருமற்ற நிலத்தில் முடிவடைகின்றது. ராணுவ லெஃப்டினெட் நெல்லையப்பன், காட்டிற்குள் ஒரு போராளி பெண்ணை கைது செய்கின்றான். அவள் மேல் கொண்ட காதலால், காட்டிற்கு அலைந்து, துரோகியாகி, மீண்டும் அவளை அடைகின்றான்.

கதையை மூன்றாக பிரிக்கலாம், முதல் பகுதி ஆக்‌ஷன், இரண்டாம் பகுதி ரொமாண்டிக், கடைசி பகுதி ட்ரமாட்டிக். 

14 ஜனவரி 2014

பஞ்சம் படுகொலை பேரழிவு - கம்யூனிசம்

ஊரில் சிறுவனாகத் திரிந்து கொண்டிருக்கும் போது, தெருமுனையில் கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டம் நடந்தது, பக்கத்து வீட்டு அண்ணன், "டேய் வர்றியா கம்யூனிஸ்ட் கூட்டத்துல போய கல்லெறியலாம்" என்று விளையாட்டிற்குக் கேட்டுவைக்க, அன்று யாரோ நிஜமாகவே கல்லெறிந்து கலவரம் ஆனது. அப்படித்தான் கம்யூனிசம் அறிமுகம். அவர்களின் பெருங்கூட்டம் சைக்கிள்காரர்களுக்குக் கூட தொந்தரவின்றி அடிக்கடி நடக்கும். இவர்களை விடத் தீவிர கம்யூனிஸ்டுகளின் அறிமுகம் எங்கள் கோவில் சுவரில், மகாபாரத்தத்தைக் கொளுத்துவோம், ராமாயணத்தை எரிப்போம் என்று வந்தார்கள். நானும் அவர்கள் குறிப்பிடும் தேதியில் ஏதாவது நடக்குமா என்று காத்திருப்பேன். ஒன்றும் நடந்ததாக நினைவில்லை. 

பள்ளியில் ரஷ்யப் புரட்சி பற்றி படித்த நினைவு. பரிட்சைக்குப் படித்ததால் அப்போதே மறந்துவிட்டது. ஓரளவிற்கு அறிவு வந்ததும், கம்யூனிஸ்டுகள் மீது ஒரு மரியாதை வந்தது. காரணம் அவர்கள் மக்களுக்கு ஏதோ செய்யவேண்டும் என்று நினைக்கின்றார்கள் என்பதும், தைரியமாக இறங்கி போராடுகின்றார்கள் என்பதும். தலைவர்கள் மீது எக்காலத்திலும் எந்த மரியாதையும் கிடையாது. அவர்களுக்கு பதவி மட்டும்தான் குறி.

இணையத்தில் படிக்க ஆரம்பித்தபின் தான் தெரிந்தது ஏகப்பட்ட புரட்சியாளர்கள் இருப்பது. அவர்களுக்கு கீ போர்ட் இருந்தால் போதும். நாலுவரி கோபமாக எழுதிவிட்டு, புரட்சி வாழ்க என்றோ அல்லது புரட்சியே இதற்கு தீர்வு என்று கூறினால் போதுமானது, முக்கியமாக தோழர் என்றழைப்பதே அனைத்தையும் விட முக்கியமானது. நாட்டில் நடக்கும் அனைத்தையும் குற்றம் சொல்ல வேண்டியது. பொதுவாக அனைவரும் முட்டாள்கள், மட்டிகள். அவர்களுக்குப் புரட்சி மூலம் ஞானஸ்தானம் அளிக்க வேண்டும். யாரையும் எவரையும் ஏதாவது ஒரு வகையில் வர்க்க எதிரியாளர்களாக்கி விடும் திறமை உண்மையில் மெச்சத்தகுந்தது. ஏதோ ஒரு வகையில் அவர்களால் ஒரு மரத்தைக் கூட வர்க்க எதிரி என்று நிரூபிக்க முடியும். இவர்களைப் படிக்கும் போது எனக்குத் தெரிந்த ஒரு பாட்டிதான் நினைவில் வருகின்றார். அவரால் முடிந்தது திட்டுவது. அனைவரையும் திட்டுவார், என்ன செய்தாலும் திட்டுவார். அதுதான் இதுவும். 

14 செப்டம்பர் 2013

வேதபுரத்து வியாபரிகள் - இந்திரா பார்த்தசாரதி

கல்கியில் 1994ல் வந்த அங்கத நாவல் (அப்படின்னா என்னா?).  எதை வேண்டுமானாலும் மிகைப்படுத்தலாம், அரசியலில் அதை செய்ய முடியாது. நமது அரசியல்வாதிகள் அதை உண்மையாக்கி தொலைத்து விடுவார்கள். கற்பனை நாவலுக்கு பதிலாக எதிர்கால குறிப்பு கிடைக்கும். சோ அப்படித்தான் ஒரு தீர்க்கதரிசியாகிவிட்டார். அது போன்ற ஒரு நாவல்.

இது போன்ற நாவலுக்கு கதை எல்லாம் தேவைதானா? இருந்தும் அப்படி ஒரு வஸ்து இருக்கின்றது. வேதபுரம் என்பது ஒரு கற்பனை நகரம். நமது தமிழகத்தின் பிரதிபலிப்பு. வேதபுரத்து தலைவர் அரூபமாக ஆண்டு கொண்டிருக்கின்றார். அவரை கண்டு, வேதபுரத்தை வைத்து பேட்டி எடுக்க வரும் அபூர்வா, எப்படி வேதபுர ராணியாகின்றாள் என்பது கதை. 

முழுக்க முழுக்க திராவிட இயக்கத்தவர்களை தான் வாரியிருக்கின்றார். தமிழ் கலாச்சாரம் என்று பேசிவிட்டு இரண்டு மனைவி வைத்துக் கொள்வது, அடை மொழி வைத்துக் கொண்டு திரிவது, சுயமரியாதை என்று பேசிவிட்டு தலைவருக்கு ஜால்ரா அடித்துப் பிழைப்பது, கடவுள் சிலையை வணங்குவதை கிண்டலடித்துவிட்டு தலைவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து வணங்குவது, புராணங்களை தூற்றி விட்டு தலைவர்கள் மீது புராணங்கள் எழுதிக் குவிப்பது, அரசியலுக்கும் சினிமாவிற்குமான தொடர்பு, என்று கடைத்த இடத்தில் எல்லாம் போட்டு தாக்கியுள்ளார். படிக்க சந்தோஷமாக இருந்தது.

அவர் எழுதிய சில நடந்தும் தொலைத்து விட்டன, இஷ்டப்படி மந்திரிகளை மாற்றுவது, 8450 நொடி உண்ணாவிரதம் இருப்பது, மிருகங்களுக்கு ஒன்று மனிதர்களுக்கு ஒன்று என்று கஞ்சி தொட்டி திறப்பது, கமிட்டி போடுவது, அதன் முடிவை ஆராய இன்னொரு கமிட்டி என்று. 

இன்னும் சில நடப்பதற்கு அதிக காலம் ஆகாது, அன்னிய முதலீடு அதிகமாகி, சி.பி.ஐயை ஒரு வெளிநாட்டு நிறுவனம் வாங்குவது, முடியாட்சி, கஜானாவை காணாமல் அடிப்பது எல்லாம் விரைவில் நடக்கு என எதிர்பார்க்கலாம். 

அங்கத நாவல் என்கின்றார்கள், என்ன அங்கதமோ. இ.பாவின் அங்கதம் எல்லாம் என்னை அவ்வளவாக கவரவில்லை.கிருஷ்ணா கிருஷ்ணாவில் இருந்த அளவிற்கு கூட இதில் இல்லை. சிறிய புன்னகை கூட வருவதில்லை. பேச்சும் மிகுந்த மிகை படுத்தப்பட்டதாகினறது.தனி மண்டை வேண்டும் போல இதை புரிந்து சிரிக்க. இதே போன்ற மிகைப்படுத்தலை சேர்ந்ததுதான் முகம்மது பின் துக்ளக் நாடகமும், ஆனால் அதில் இருந்த சுவாரஸ்யம் இதில் இல்ல. 

படிக்கலாம் ஓசியில் கிடைத்தால்.

24 நவம்பர் 2012

முகம்மது பின் துக்ளக் - சோ

சோ இவரை எந்த வகையில் சேர்ப்பது. எழுத்தளாரா, பத்திரிக்கையாளரா, நாடக ஆசிரியரா, சினிமா நடிகரா, நாடக நடிகரா, அரசியல்வாதியா, வழக்கறிஞரா, இயக்குனாரா? எல்லா துறைகளிலும் காலைவைத்துள்ளார். வெற்றியும் பெற்றுள்ளார். நடுநிலைமை என்றால் சோ என்று கூறப்படும். இப்போது அதிமுகவிற்கு பாஜக விற்கும் அதிகம் சப்போர்ட் செய்வது போல்தான் தோன்றுகின்றது.

தமிழ்நாட்டின் நாடக உலகில் சோ ஒரு முக்கிய மைல் கல். இன்று நாடகம் நடத்து கிரேஸி மோகன், மெளலி போன்றவர்களுக்கு இன்ஸ்பெரெஷன். சில வருடங்களுக்கு முன்பு அவர் மீண்டும் நாடகம் போட்ட போது அரங்கு நிறைந்தது. பெரும்பாலனவர்கள் இளைஞர்கள்.

அரசியல் கலந்த நாடகங்களை எம்.ஆர். ராதாவிற்கு பின் வெற்றிகரமாக நடத்தியவர் சோ. சோவின் நாடகங்களும் பலத்த கலவரங்களுக்கு நடுவில் நடந்திருக்கின்றன என்று கேள்விப்பட்டுள்ளேன். படம் வெளிவந்த போது கலட்டா நடந்துள்ளது.

08 அக்டோபர் 2012

ஜனகணமன - மாலன்

காந்தியைப் பற்றி மக்களின் பார்வை பலவித காரணங்களைப்  பொறுத்து மாறுகின்றது. சிலருக்கு மாபெரும் மனிதர், வழிகாட்டி, சிறந்த அரசியல்வாதி, நல்ல தலைவர், சுதந்திரம் பெற்றுத் தந்தவர், மக்களிடம் அஹிம்சையை பரப்பியவர், எளிமையானவர் என்று அவரைப் பற்றி போற்றுவோரும் உள்ளனர், அதே சமயம் அவர் இந்து மதவாதி, இந்துக்களுக்கு துரோகம் செய்தவர், இஸ்லாமியர்கள் மீது கரிசனம் காட்டியவர், தலித்துகளுக்கு எதிரானவர், தன் முடிவை மற்றவர்கள் மீது திணித்தவர், உண்ணாவிரதம் என்ற பெயரில் மற்றவர்களை மிரட்டியவர் என்று கூறுவோரும் உள்ளனர். பெரும்பாலான கருத்துக்கள் மற்றவர்களால் உருவாக்கப்பட்டு ஒருவர் மீது திணிக்கப்பட்டதாகத்தான் இருக்கும்.

இது போன்ற பல விமர்சனங்களே அவர் ஒரு பெரிய ஆள் என்பதற்கு போதுமான சாட்சி. காந்திமீது பலவித விமர்சனங்கள் இருந்தாலும் அவரை யாரும் ஒரு மோசமான மனிதர் என்று கூறியதில்லை. ஆனால் இன்றைய சிந்தந்தப்படி ஒருவரின் கருத்து பிடிக்காவிட்டால் அவரையே பிடிக்காமல் போகவேண்டுமே, அதனால் பல இளைஞர்களுக்கு அவர் மோசமானவர். 

02 அக்டோபர் 2012

18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்

புத்தகம் படிக்கும் வழக்கம் சிறுவயது முதலிருந்தாலும், இணையத்தின் மூலமாகத்தான் பல நல்ல எழுத்தாளர்கள், புத்தகங்கள் அறிமுகமானர்கள். சிலிக்கான் ஷெல்ப், ஜெயமோகன் இவர்களின் தளத்தில் பல புத்தக விமர்சனம், அறிமுகம் கிடைக்கப்பெற்றேன். அதே போல் புத்தகம் வாங்குவதும் பெரிய சவாலாக இருந்து. பெங்களூரில் தமிழ் புத்தகத்தை எங்குவாங்குவது. ஹிக்கின்பாதம்ஸில் சமையல் கலைதான் கிடைக்கின்றது. அதற்கும் இணையம் தான் துணை. கிழக்குப்  பதிப்பகத்தின் செயல்பாடு மிகச்சிறந்தது.

அசோகமித்திரனின் பெயரைக் கேட்டிருந்தாலும் அவரின் புத்தகங்கள் எதையும் படித்ததில்லை, புத்தகங்களைப் பற்றியும் கேள்விபட்டதில்லை. அவரின் தி.ஜாவை பற்றிய பேட்டியை சொல்வனத்தில் படித்து கொஞ்சம் எரிச்சலாகக் கூட இருந்தது. அதோடு அவரின் கதைகள் சீரியஸாக இருக்குமோ என்ற எண்ணம் வேறு. 18வது அட்சக்கோடு பற்றி பலரும் பேசுவதைக் கேட்டுத்தான் வாங்கினேன். எப்புத்தகத்தையும் வேகமாக பல முறை படிப்பது என் வழக்கம். முதலில் புத்தகத்தை முடிக்க வேண்டும் என்ற வெறி. பின்னர் மெதுவாக பல முறை படிப்பதுண்டு.