30 ஆகஸ்ட் 2017

திரைகளுக்கு அப்பால் - இந்திரா பார்த்தசாரதி

ஒரு டெல்லி நாவல். 

கறுப்பு நிறத்தால் கணவனைவிட்டு விலகி வாழும் பெண்ணை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு நாவல். தாழ்வுமனப்பான்மை ஒரு எல்லைக்கு மேல், ஒரு உயர்வு மனப்பான்மையை உண்டாக்கி, ஒரு முரட்டுத்தனமான முகமூடியை போட்டு கொள்ளும். பின்னர் அந்த முகமூடியை கழட்ட முடியாமல் அதோடு திரிய வேண்டியிருக்கும். என்றாவது ஒரு நாள் அந்த முகமூடி எவராலோ கிழிக்கப்படும் போது அதை தாங்க முடியாது. 

முகமூடி அணிந்த ஒரு பெண்ணின் கதைதான் இது. வழக்கமான இ.பா டைப் பாத்திரங்கள். எதிராளியை குத்தி கிழித்து அனுபவிக்கும் பாத்திரங்கள், அறிவுஜீவி முகமூடிகள், மெலிதான காமம். 

வெளிவந்த காலத்தில் பரபரப்பாக இருந்திருக்கலாம், ஆனால் இன்று ஒரு சராசரி நாவல் என்பதற்கு மேலேக ஒன்றுமே தோன்றவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக