21 மே 2020

இன்றைக்கான தலை

கணேஷ் பாலா - அவருடைய பக்கத்தில் படம் பார்த்து கதை சொல் என இந்தப் படத்தை வெளியிட்டிருந்தார். சுஜாதாவின் தேஜஸ்வி பாதிப்பில் சும்மா எழுதியது

டொக் டொக்

"திறந்துதான் கதவு இருக்கு வா உள்ள" என்ற சத்தம் கேட்டது

"சார் நீங்க கேட்ட உப்பு போட்ட காப்பி" என்ற படி, கதவை திறந்து வந்த பேரர் உறைந்து போய் நின்றான், வலது கையிலிருந்த ட்ரே நடுங்கியது, அந்த குளிரிலும் வியர்வை அரும்பியது.

உள்ளே டீப்பாயின் மேலிருந்த தலையில் கையை வைத்து கொண்டிருந்த அவன், திரும்பி பார்த்து "வா இங்க" என்றான்.

பேரர் கால் நகர மறுத்தது. அந்த தலையை பார்த்தவாரே மெதுவாக நடந்து வந்தான். வாய் குழற "சாழ் சாழ், எனக்கு கல்லியாணம் கூட ஆகல"

"வா இங்க" என்று குரல் அழுத்தமாக வந்தது

ட்ரேயை அங்கிருந்த மேஜையில் வைத்துவிட்டு அருகில் வந்தான்

இந்த ரெண்டு விரல்ல ஒன்ன தொடு என்று சொல்ல, பேரர் பயந்து கொண்டே ஒரு விரலைத் தொட்டான், விரல் ஐஸ் மாதிரி குளிர்ச்சியாக இருந்தது.

ஹூம், என்றபடி, தன் தலையை கழட்டி டீப்பாயில் வைத்துவிட்டு, டீப்பாயிலிருந்த தலையை எடுத்து மாட்டிக் கொண்டு, பேரர் கொண்டு வந்த காப்பியை மூக்கின் அருகில் வைத்து உறிஞ்சினான். கப்பில் வெறும் பால் மட்டும் மிச்சமிருந்தது. சுவற்றில் மாட்டியிருந்த ஓவியத்தை கழட்டி, தலையுடன் சேர்த்து ஒரு பெட்டியில் வைத்துக் கொண்டு அறையை விட்டு சென்றான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக