ஜெயமோகனின் தளத்தில் வெளிவரும் போது படிக்க முடியவில்லை. சிலிக்கான் ஷெல்பில் ஆர்.வி எழுதிய பின் தேடினால் கிடைத்தது. ஆனால் பழைய நூலகத்தில் இருந்து புத்தகம் எடுத்து படிக்கும் அனுபத்தை தந்தது. நூலகத்தில் பழைய புத்தகத்தை படிக்கும் போது சில பக்கங்கள் இருக்காது, யூகித்து படிக்க வேண்டியது இருக்கும். முடிவு பகுதி இருக்காது. அது போல அவர் தளத்தில் ஒன்று விட்டு ஒன்றாக பகுதிகளை மறைத்து வைத்திருந்தார். உடனே படிப்பவர்களுக்கு மட்டும்தான் கிடைக்கும். அவர்கள் கூட மறுபடியும் படிக்கலாம் என்றால் கிடைக்காது. ஆனாலும் விடவில்லை, சுஜாதா கூறியது போல இணையத்தில் இருந்தது, இருப்பது எங்கும் போகாது என்று தேடி cache பதிவுகளை கண்டுபிடித்து படித்துவிட்டேன். இப்போது அது முழுவது நீக்கப்பட்டுள்ளது,ஆனாலும் எங்காவது கிடக்கும். புத்தகமாக வரும் போது இங்கும் இருந்தால் கஷ்டம்தான்.
ஒரு வெப்சீரிஸூக்கு எழுதப்பட்ட கதை என்று தோன்றுகின்றது. வேகப்புனைவு அதாவது திரில்லர் வகை.