கல்கி எழுத்திற்கு பின்பு எனக்கு அறிமுகமானவர் ஜெயகாந்தன். கல்லூரியில் படிக்கும் போது நண்பன் கையில் எப்போதும் சில புத்தகங்கள் இருக்கும். கண்டிப்பாக பாட புத்தகங்கள் அல்ல. பாலகுமாரன், ஜெயகாந்தன், ஓஷோ. நல்ல காம்பினேஷன் இல்லையா?
இவர்களில் பாலகுமாரன் மீது அந்தளவிற்கு ஒரு ஈர்ப்பு இல்லை. காரணம் அவரின் பேட்டி ஒன்றை எங்கோ படித்ததுதான். ஜெயகாந்தன் பற்றி எந்த அபிப்பிராயமும் இல்லை. நண்பனிடமிருந்து ஜெயகாந்தனின் இரண்டு புத்தகங்களை வாங்கி சென்றேன். ஒரு சிறுகதை தொகுப்பு. எதுவும் இன்று நினைவில் இல்லை. மற்றுமொரு புத்தகம், ரிஷிமூலம். ஜெயகாந்தனை அதிகம் படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும். கல்கியை படித்தவனுக்கு இந்த புத்தகம் கொஞ்சம் அதிகம்தான். அந்த புத்தகத்தை மொட்டைமாடியில் புகைபோக்கியில் படுத்து கொண்டு படித்தேன். அங்கேயே பதுக்கி வைத்துவிட்டு வந்தே. யார் கண்ணிலாவது பட்டால் என்னாவது?
இவர்களில் பாலகுமாரன் மீது அந்தளவிற்கு ஒரு ஈர்ப்பு இல்லை. காரணம் அவரின் பேட்டி ஒன்றை எங்கோ படித்ததுதான். ஜெயகாந்தன் பற்றி எந்த அபிப்பிராயமும் இல்லை. நண்பனிடமிருந்து ஜெயகாந்தனின் இரண்டு புத்தகங்களை வாங்கி சென்றேன். ஒரு சிறுகதை தொகுப்பு. எதுவும் இன்று நினைவில் இல்லை. மற்றுமொரு புத்தகம், ரிஷிமூலம். ஜெயகாந்தனை அதிகம் படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும். கல்கியை படித்தவனுக்கு இந்த புத்தகம் கொஞ்சம் அதிகம்தான். அந்த புத்தகத்தை மொட்டைமாடியில் புகைபோக்கியில் படுத்து கொண்டு படித்தேன். அங்கேயே பதுக்கி வைத்துவிட்டு வந்தே. யார் கண்ணிலாவது பட்டால் என்னாவது?