23 மார்ச் 2017

கிமு கிபி - மதன்

மதனின் பிரச்சினை அவர் படிக்கும் வரலாறு அனைத்து பாரதக்கண்டத்திற்கு வெளியேதான் இருக்கும். கில்காமேஷ் வரலாறு, ராமாயணம் புராணம் என்ற வகையில் தான் அவர் பார்வை போகின்றது. இந்தியப்புராணங்கள் பற்றி அவர் எங்கும் எதுவும் பேசுவதில்லை. அதை வெறும் கதை என்று மட்டும் ஒதுக்க முடியுமா என்ன? ஒரு முறை விகடனில் ஹாய் மதனில், பூமாதேவிக்கும் இரண்யகசிபுவிற்கும் பிறந்தவன் நரகாசுரன் என்று எழுதியிருந்தார். இன்னும் சில பல தவறுகளும் தொடர்ந்து வெளியாகி கொண்டிருந்த நினைவு. 

கிமு கிபி என்ற பெயரில் மனித குல வரலாற்றை சொல்லும் புத்தகம் என்றே முன்னுரை சொல்கின்றது. மனிதன் எவ்வாறு தோன்றினான், நாகரீகம் எப்படி வளர்ந்தது என்பதை பற்றியெல்லாம் வெகுவிரிவாக பேசுவதாக் குறிப்பு சொல்கின்றது. நாகரீகம் போன்றவை என்றாலே அவை இந்தியாவிற்கு வெளியில்தானே இருக்க வேண்டும். பாபிலோன், கில்காமேஷ் என்று மந்திய ஆசிய புராண வரலாறுகளை பற்றி விரிவாக பேசுகின்றது. கிமுவிற்கு முற்பட்ட காலத்தில் பாபிலோனில் நாகரீகம் செழித்து வளர்ந்த காலத்தில், இந்தியாவில் ஒன்றுமே கிடையாது. சிறு சிறு கூட்டங்கள் மட்டுமே இருந்தன என்று கூறப்பட்ட பகுதிகள் வந்தவுடன் படித்து கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு அடுத்த வேலையை பார்க்க சென்றுவிட்டேன். மேற்கொண்டு புத்தகம் எப்படி இருக்கும் என்பது தெரிந்துவிட்டது. 

மேற்கொண்டு ஏதும் சொல்வதற்கில்லை.

யாராவது படித்தவர்கள் உருப்படியாக ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் கேட்டுக் கொள்கின்றேன்

2 கருத்துகள்:

  1. மதன் புத்தகங்கள் பி டி எஃப் வடிவில் இணையத்தில் கிடைக்கின்றன.

    பதிலளிநீக்கு
  2. ஓசியில் படித்ததுதான். கிண்டில் அன்லிமிட்டடில் கிடைக்கின்றது.

    பதிலளிநீக்கு